[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)
நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
Continue reading