முக்கடல் முத்து

இஸ்லாம் உள்ளிட்ட பல இடைக்கால சமூகங்களில் பால் பந்தம் என்ற உறவுமுறை இருந்தது. அதாவது ஒரே தாயிடம் பால் குடித்து வளர்ந்த இருவர் தங்களை சகோதரர்களாகக் கருதிக்கொள்ளும் வழக்கம். இன்று குமரித்துறைவியின் தெலுங்கு மொழி மொழியாக்கம் குறித்து நண்பர் ராஜூ எழுதியுள்ள இக்கடிதத்தை வாசித்தபோது இவர் என் பால் சகோதரர் அல்லவா என்ற உணர்வெழுச்சி ஏற்பட்டது. மொழியாக்கக்காரர்களின் சிறிய இன்பங்களில் ஒன்று தாங்கள் மொழிபெயர்த்த நூலைக்குறித்து அதே நூலை பிறமொழிகளில் மொழியாக்கம் செய்தவர்களுடன் உரையாடுதல். அவ்வின்பத்தின் பலபடி … Read more

வாழ்க்கைப்பரிசு

மே மாதம் காவிய முகாமில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் முகமாக அங்கே வந்திருந்த பெண் வாசகர்களுடன் வாசிப்பு சார்ந்து இரவில் உரையாடினேன். அந்நிகழ்வு பற்றிய மனப்பதிவுகளை தனியாக எழுத வேண்டும். சற்று காலம் போகட்டும் என்று காத்திருக்கிறேன். அந்நிகழ்வில் என் மனதைத் தூண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அங்கு வந்திருந்தவர்களில் பலரும் தாங்கள் எழுதவேண்டும் என்ற கனவோடு இருந்தார்கள். இரண்டாவது, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிருக்கும் பெண்கள் எப்படி நேரப்பங்கீடு செய்யலாம், நாளை எப்படி வடிவமைக்கலாம் என்று … Read more

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – தொகுப்பாக

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு Dharma’s dog நண்பர், மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் மொழியாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றிய கருத்துகளை நீக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம். இந்த விவகாரத்தைக் குறித்து நண்பர், மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எழுதிய மறுப்பும் தன்னளவில் முக்கியமானது. இச்சர்ச்சையைத் தாண்டி, இன்று இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கை பற்றிய பொது விவாதத்திலும் அவருடைய கருத்து முக்கியத்துவம் பெருகிறது. ஜெகதீஷ் குமாருடனான நேர்காணலை வெளியிட்ட மொழிபெயர்ப்பாளர் … Read more

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு

“மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுகிறேன். இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது. ஏ.ஐ என்பது கூகுளைவிட மேலும் தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்புச் சாதனம் என்ற புரிதல் … Read more

பெண்ணெழுத்தாளர்களும் இயல்புத்தன்மையும்

நீலியில் வெளியான பத்மா விஸ்வநாதனுடனான நேர்காணலைப் பற்றிக் கடிதம் எழுதி அனுப்பிய பிறகு அதில் பத்மாவின் வெளிப்பாட்டில் இருந்த இயல்புதன்மை பற்றிச் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நினைப்போடு வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கை மீண்டும் சென்று பார்த்தேன். அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் … Read more

அசோகம்

போன வருடத்தின் டைரியை புரட்டிக்கொண்டிருந்தேன். பிப்ரவரி 8, 2024, அன்று எழுதிய குறிப்பு கண்ணில் தென்பட்டது. ‘அசோக மரம் பூத்திருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன். இன்று வளாக எல்லைகளில் நடப்படும் நெடிய அலங்கார மரத்தைத்தான் அசோகா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. நீளமான, நெளிந்த விளிம்புகளுடைய இலைகள் கொண்ட மரம். ஆனால் செவ்வியல் பழமை கொண்ட அசோகமரம் இதுவல்ல. Saraca asoka என்று பெயருடைய அந்த மரம் மிக நளினமான தோற்றம் கொண்டது. அதன் அடிமரம் மெலிதானது. கிளைகள் … Read more

மொழியாக்கமும் படைப்பாக்கமும் [உரை]

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

Read more

ஒரு முதிராக் காதல்

பதின்பருவத்தின் ஒரு முதிராக் காதலின் நினைவு போல என் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் உள்ளது. பதின்பருவத்து காதலைப்பற்றி எண்ணும் போது அப்போதைய முதிர்ச்சியின்மையின் நினைவுகளால் உருவாகும் ‘கிரிஞ்ச்’ உணர்வை அடைந்தாலும் அந்நினைவுகளில் ஓர் உவகையும் இல்லாமல் இருக்காது. அதைப்போலத்தான் முதல் தொகுப்பும். இது நடந்திராமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சரி அதுதான் நடந்துவிட்டதே, போகட்டும் என்ன குறைந்துவிட்டது என்று அடுத்தக்கணமே தோன்றுகிறது. பிறகு அது நிகழ்ந்தபோது அனுபவமான இனிமைக்கணங்களை – இனிமைக்கணங்களை மட்டும் – ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நினைவு தீண்டித் திறந்துப் பார்க்கிறது. உவகை, லஜ்ஜை, அசட்டுச்சிரிப்பு. முதல் தொகுப்பை பற்றி எண்ணும்போதெல்லாம் இந்த பரிதவிப்பும் பரவசமும் தான் மாறி மாறித் தோன்றுகின்றன. இன்று நீலி இதழில் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’யைப் பற்றி நண்பர் சக்திவேல் எழுதியிருக்கும் குறிப்பை வாசித்தபோது இவ்வுணர்வுகளை என் மனம் உருவகித்து வளர்த்த விதத்தை சற்று ஆச்சரியத்துடன் பின் தொடர முடிந்தது. சொல்லப்போனால் அதுவே ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது. 

Read more

ஒரு தலைமுறையின் விதி

[நன்றி: நீலி இணைய இதழ்]

பகுதி – 1

தூரங்கள்

1

தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் நோக்கம் ஒன்று தான் — சதிர் என்றும் தாசியாட்டம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட நடன வடிவை ஒரு கலையென மக்கள் முன் அறிமுகப்படுத்தி அரங்கேற்றுவது. 

ஈ. கிருஷ்ண ஐயர்

Read more

படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம் 2 படைப்பின் இலட்சியம் [குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்] பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் … Read more