படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம்

2

படைப்பின் இலட்சியம்

[குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்]

பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் பிரத்யேகமான கூறுகள் என்னென்ன என்று விவரிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அக்கூறுகளில் முதலாவதாக அது கருதுவது : வ்ருப பேத:ரூபங்களின் தனித்துவத்தன்மை. ஒரு சித்திரத்தில் பல ரூபங்கள் இருக்கலாம். ஒவ்வொரு ரூபமும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு ரூபத்துக்கும் அதன் எல்லைகள் உள்ளது. ஆனால் அவ்வெல்லைகள் திண்மையானவையாக திட்டவட்டமானவையாக இருக்குமென்றால் அந்தச்சித்திரம் ரூபங்களின் திரளாகவே நிற்கும். திரளின் பயங்கரமான தனிமையே அதனில் வெளிப்படும். மாறாக, ஒரு சித்திரத்தில் உள்ள பல ரூபங்கள், அவற்றின் தனித்தன்மைகளை மீறி, அவற்றுக்கு முரணாகவே, அவற்றை இணைக்கும் ஒருமையின் ஒரு கூரை தாங்கியிருக்கவேண்டும். அப்படி நிகழவில்லையென்றால் படைப்பு நிகழவில்லை என்று பொருள்.

சித்திரத்தின் முதற்கூரான ரூபங்களின் தனித்துவத்தன்மை என்பதை அடுத்து அந்தச் செய்யுள் இரண்டாவது கூராக அளவீடுகளை சொல்கிறது. இதை பிரமாணானி என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. அளவீடுகள் என்னும்போதே அது பரஸ்பர உறவுகளை குறிக்கின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்துக்கு தேவைகான இடம் கொடுத்தே அந்த பரஸ்பரம் உருவாகிறது. உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கால் கார்ட்டூன்படத்தைப்போல எவ்வளவு பூதாகரமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் உடலுடன் சேர்ந்திருக்கையில் அது உடலில் உயிரெனக் கூடும் ஒருமையுடன் இணைதிருக்கத்தான் வேண்டும். அது தன்னை அளவோடு நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி அல்லாமல், உடற்கூறுகளை மீறி எம்பி அது தன்னுடைய சகாவை விட பலமடங்கு நீட்டம் கொள்ளும் என்றால், அது பார்வையாளன் கண்ணுக்கு எப்படித்தென்படுமென்றும், அந்த உடலுக்கே எத்தனைப்பெரிய தர்மசங்கடமாக முடியுமென்றும் நம்மால் ஊகிக்கக்கூடியதே. அளவீடுக் கொள்கையை மீறி, “நான் சுதந்திரமானவன்” என்று சித்திரத்தில் ஒரு அங்கம் மட்டும் முழங்குமேயானால் அது செய்வது கலகமேயாகும். அப்படி கலக்கத்தில் இறங்கினால் அது படத்தின் மற்ற அங்கங்களால் கருணையில்லாமல் அடித்து நொறுக்கப்படும். அல்லது முழுமையுடன் இணையாமல் என்றென்றைகும் தனித்தே நின்றுவிடும். இதில் ஒன்றே அதன் விதியாக அமையும். 

பிரமாணானி என்ற சம்ஸ்கிருதச் சொல் அழகியல் நூலில் அளவீடுகளைக் குறிக்கிறது. தத்துவ நூலில் ஒரு அறிவை அடையும் வழியை, அந்த அறிவுக்கான சான்றுகள் என்னென்னெ என்பதை குறிக்கிறது (பிரமாணம் – சான்று). அறிவுக்குறிய சான்றுகள் எல்லாமே அறிவுடன் சம்பந்தம் உடையவை. ஒவ்வொரு சான்றும், அதிலிருந்து அந்த ஒட்டுமொத்த அறிவு எவ்வாறு அடையப்படுகிறது என்று ஐயம் திரிபட நிரூபித்தாகவேண்டும். ஒரு நாட்டில் உள்ளவர்கள் எப்படி அடையாள அட்டயைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் தான் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கிறார்களோ, அதேபோல் ஒவ்வொரு சான்றும் அந்த அறிவின் முழுமையை சுட்டும் விதமாக சந்தேகத்திற்கிடமில்லாமல் அமையவேண்டும். அந்த முழுமையை தனித்தொருவராக நின்று தங்களில் எவரும் உடைக்கவில்லை என்று நிரூபிக்கவேண்டும். தத்துவத்தில் உள்ள தர்க்கச்சான்றுகளின் தர்க்கரீதியான உறவும், கலையில் உள்ள அளவீடுகளின் அழகியல்ரீதியான உறவும், ஒரு புள்ளியில் இணக்கம் கொள்கின்றன. உண்மையென்பது தனித்தனி தகவல்களில் இல்லை. அந்தத் தகவல்களின் இணைவில், இசைவில் இருக்கிறது. இதில் ஓர் பிரபஞ்ச உண்மை பொதிந்திருக்கிறது. இதையே கவிஞன் “அழகு தான் உண்மை, உண்மையே அழகு” என்கிறான். 

அளவீடுகளே பரஸ்பர சமநிலையை உருவாக்குகிறது. படைப்புடைய லட்சியங்களின் கட்டமைப்பை இதுவே அமைக்கிறது. மனிதர்கள் கூட்டமாகக் கூடினால் அது வெறும் திரள். ஆனால் ராணுவப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அளவீடின் வட்டத்துக்குள் நின்று செயல்படுகிறான். காலத்தில், வெளியில், நிற்கவேண்டிய இடத்தில் நின்று, நகரவேண்டியபடி நகர்ந்து, செய்ய வேண்டிய செயலை செய்கிறான். ஒரு வீரனும் மற்றொரு வீரனும் பரஸ்பர பந்தத்துடன் அவரவருக்கான இடத்திலும் செயல்வட்டத்திலுமே நின்றபடி செயலாற்றுவார்கள். இதுவே அவர்களை ராணுவத்துடன் ஒன்றியவர்களாக ஆக்குகிறது. ஆனால் அது மட்டும் அல்ல. படை என்பதே அதன் தலைவரின் மனத்திலுள்ள படை என்ற கருத்தின் புற வடிவம். அந்த கருத்தே படையை இயக்கும் ஒற்றை விசையாக உள்ளது. இப்படி, ஒரு படைப்பை இயக்கவும் ஒரு விசை தேவையாகிறது. அந்த விசையின் இயல்புக்கு ஏற்ப, அது கலைப்படைப்பா, அல்லது வெறும் கட்டுமானமா என்று வகுக்கலாம். கூட்டுப்பங்கு நிறுவனத்தின் அமைப்பையும்  நிர்வாக கொள்கைகளையும் உள்ளூர ஒரு விசை கூடி தீர்மானிக்கிறது. ஆனால் அந்த ஒற்றை விசையின் வெளிப்பாடு மட்டுமே அதன் இருப்பின் நோக்கம் அல்ல. அதைத்தண்டிய யதார்த்தமான காரணத்தை நிறைவேற்றவே அது அமைக்கப்படுகிறது. மாறாக, ஒரு கலைப்படைப்பின் தரிசனமென்பது தன்னளவிலேயே நிறைவும் முழுமையும் கொண்டதாகும். 

நம்முடைய இருப்பை, ஆளுமையை, ‘நான்’ என்று நாம் உணர்கிறோம். அது நம்மில் கூடியுள்ள ஒருமையின் உணர்வு. அந்த உணர்வு நாம் மகிழ்ச்சி, அல்லது சோகம், அல்லது பிற ஆழமான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படும்போது மேலும் வலுவாகிறது. அது வானத்தைப்போல. நீலநிறமாக இருப்பதால் தான் கண்ணுக்குத்தெரிகிறது. நாட்பொழுதில் நிறங்கள் மாற மாற வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கிறது. கலைப்படைப்பிலும் ஒரு இலட்சிய உணர்சின் விசை அதன் ஒருமைபபட்டுக்கு அவசியமாகிறது. ஏனென்றால் கலைப்படைப்பின் ஒருமைப்பாடு ஒரு படிகத்தின் ஒருமைப்பாடு போல மந்தமானதும், ஈடுபாடில்லாததும் அல்ல. உணர்ச்சிகரமான, ஆற்றல்மிக்க வெளிப்பாட்டையுடையது. இந்தக்கவிதையை பாருங்கள்:

Oh, fly not Pleasure, pleasant-hearted Pleasure,

Fold me thy wings, I prithee, yet and stay.

For my heart no measure

Knows, nor other treasure

To buy a garland for my love to-day.

And thou too, Sorrow, tender-hearted Sorrow,

Thou grey-eyed mourner, fly not yet away.

For I fain would borrow

Thy sad weeds to-morrow,

To make a mourning for love’s yesterday.

இந்த மேற்கோளிலுள்ள வார்த்தைகள் சந்தத்தை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறாக கோர்க்கப்பட்டிருந்தால் அது நம்மை எவ்விதத்திலும் ஈடுபடுத்தாது. என்னதான் கச்சிதமாக அளவீடுகளோடு சந்தமும் தாளமும் கூடியிருந்தாலும் அது வெறும் கட்டமைப்பாகவே நிற்கும். ஆனால் அதே வார்த்தைகள் உள்ளுரையும் ஓர் இருப்புக்கு வெளிப்புற உடலாக அமையும்போது அது தனக்கென்று ஓர் ஆளுமையை அடைகிறது. அந்த தாளம் வழியாகவே அதில் உள்ளுறையும் அந்த இருப்பு பிரவாகிக்கிறது. வார்த்தைகளில் ஊடுருவுகிறது. அவற்றின் ஏற்ற இறக்கங்களில் துடித்துத்துடித்து உயிர்கொள்கிறது. மாறாக, இக்கவிதையில்லுள்ளே உறையும் உணர்வை வெறும் கருத்தாக, சந்தவிசேஷமில்லாத வாக்கியத்தில் கூறினோமானால், அது வெறுமனே ஒரு செய்தியை வெளிப்படுத்தும். உயிரற்றதாக, பிணம்போல் இருக்கும். அதனை பாடுவதில் எந்தப்பயனும் இருக்காது. அந்த உணர்வுப்பூர்வமான இருப்பு சரியான சந்ததாளவடிவத்தில் அமைகையில் மட்டுமே, ஒருகணமும் நில்லா நீங்கா இவ்வுலகின் நித்தியப்பெருவிழாவில் இடம்பெருவதற்கான உயிர்ப்பு அதனில் அமைகிறது.

இந்த வேடிக்கைப்பாட்டை பாருங்கள்:

Thirty days hath September,

April, June, and November.

இதில் சந்தமுள்ளது. உயிர்ப்பலையின் சாயல் உள்ளது. ஆனால் நம்முடைய இதயத்துடிப்பின் சந்தத்தோடு இந்த வரிகள் இழைவதில்லை, இவ்வரிகளில் ஒருமையை உருவாக்கும் உயிர்ப்பு இல்லை. இவ்வரிகள் கைப்பிடிகள் வைத்தப் பை போல வசதியாக உள்ளன. மனித உடலைப்போல் தவிர்க்கமுடியாததாக, வேறெப்படியும் படைக்கப்பட்டிருக்கமுடியாதென்ற உணர்வை உருவாக்கவில்லை.

நம்முடைய சொந்த கலைப்படைப்புகளில் உறைந்திருக்கும் இந்த உண்மை நமக்கு படைப்பின் அகத்தில் பொதிந்துள்ள மர்மத்திற்குள் ஒரு சின்ன வெளிச்சத்தை காட்டுகிறது. இவ்வுலகின் முடிவில்லா சந்தங்கள் வெறும் கட்டமைப்புகளல்ல. இவை நம்முடைய இதய நரம்புகளை சுண்டி இழுதக்கின்றன. இசைக்கின்றன.

ஆகவேதான் நாம் இந்த பிரபஞ்சத்தையும் ஒரு படைப்பென்று உணரலாகிறோம். அதன் மையத்தில் உயிர்ப்பான ஒன்று இருக்கிறதென்றும், அது தன்னை எண்ணிலடங்கா இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் முதல்முடிவில்லாத பிரபஞ்ச கானமாக வெளிப்படுத்திக்கொள்கிறதென்றும் நாம் உணர்கிறோம். ஒரு நொடிக்கூட அதன் தாளம் தப்புவதில்லை. வானத்துக்கு வானம் தோரணம் கட்டி விரியும் இம்மாபெரும் உலகக்கவிதையானது வெறும் பருப்பொருட்களின் பண்டவஸ்துக்களின் நிதர்சனங்களின் பட்டியலல்ல. நாம் ஆனந்தத்தை உணரும்போதெல்லாம் அப்பாடலின் நேரடியான தரிசனத்தை அறிகிறொம். நம்முடைய ஆனந்தமே இப்பிரபஞ்ச பேரிருப்பின் ரகசியங்களுக்குத் திறவுகோல். ஒரு பேராளுமை இப்பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா ஆளுமைகளின் மேல் தன்னுடைய ஓயாத வெளிப்பாட்டின் வழியே கோலோச்சுகிறான். வக்கீல் வாய்தாக்காரனைப்பார்த்து பாடுவதில்லை, ஆனால் புதுமணவாளன் தன் மனைவி கேட்கவேண்டுமென்று பாடுகிறான். நம்முடைய ஆன்மா அப்பாடல் கேட்டு நெகிழ்ந்து கரையும் போது, அது நம்மிடம் கட்டணமேதும் எதிர்பார்ப்பதில்லை என நாம் அறிகிறோம். காதலின் சமர்ப்பணத்தையே அம்மணவாளனின் குரலில் கேட்கிறோம். மறுக்கமுடியாத ஓர் அழைப்பும்.

சித்திரக்கலை, இன்னும் பிறக்கலைகளில் சில வடிவங்கள் அலங்காரத்துக்கென்றே படைக்கப்படுகின்றனவே, அவற்றுக்கு வெளிப்படுத்த உயிர்ப்பான உள்ளுறையும் இலட்சியம் ஏதும் இல்லையே என்ற கேள்வியை நாம் எழுப்பலாம். ஆனால் அது அப்படி அல்ல. அலங்காரக்கலையில் படைப்பாளியின் உணர்ச்சிகரமான வெளிப்பாடு உள்ளது. “இதன் படைப்பில் நான் மகிழ்கிறேன், இது நன்று,” என்ற உணர்வு.  ஆனந்தத்தின் மொழிபுகள் அனைத்துமே அழகுதான். ஆனால் இங்கே ஒன்று சொல்லியாகவேண்டும். உண்மையான மகிழ்வு என்பது வெறும் கேளிக்கை அல்ல. அழகு வெறும் வடிவலட்சணம் அல்ல. தன்னிலையிலிருந்து பிரிந்து எழுந்து உயர்கையில் உருவாகும் உணர்வே மகிழ்வு. அது ஆனந்தம். உள்ளம் பிணைப்புகளில்லாமல் ஆகையில் உருவாகும் உணர்வது. அழகென்பது இங்கு உறையும் உண்மையான சாரமான ஒன்றின் ஆழமான வெளிப்பாடு. அந்த சாரத்தின் வெளிப்பாடு மட்டுமே நம்முடைய மனங்களை நிறைவடையச்செய்கிறது. வேறு வசீகரங்களேதும் அதனிடத்தில் இருப்பதில்லை. தேவையும் இல்லை. வெகுசில தூயப் பரசவசக் கணங்களில் நாம் உலகத்தைப்பற்றிய இந்த உண்மையை நேரடியாக பிரத்யட்சமாக அறியலாகிறோம். நாம் இந்த உலகை வெறும் இருப்பாக மட்டுமல்லாமல், அதன் வடிவங்கள், ஒலிகள், நிறங்கள், வரிகளினால் அழகூட்டப்பட்டிருப்பதை அறிகிறோம். “என் படைப்பில் நான் மகிழ்கிறேன்” என்று நின்று பெருமையுடன் அறிவிக்கும் ஒன்று  அவற்றின் வழியாக வெளிப்படுவதை நம் உள்ளங்கள் அறிந்துகொண்டே இருக்கிறது.

இதனால் தான் அந்த சம்ஸ்கிருதப் பாடல் ஒரு சித்திரக் கலைப்படைப்பின் இன்றியமையாத பாகங்களாக (1) ரூபங்களின் தனித்துவத்தன்மை, (2) சரியான அளவீடுகள், அவற்றின் ஒருமை என்பதுடன், (3) ஃபாவ: – அதன் உணர்ச்சிப்பூர்வமான மையம் என்று மூன்றாவதாக குறிப்பிடுகிறது.

உணர்ச்சிகரமான வெளிப்பாடு மட்டும் கலையாகாது – அது எத்தனை உண்மையான உணர்வாக இருந்தாலும் சரிசரி இந்தப்பாடல் அதன் ஆசிரியரால் “இரக்கமற்ற காதலியிடம் ஒரு விண்ணப்பம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது:

And wilt thou leave me thus?

Say nay, say nay, for shame!

To save thee from the blame

Of all my grief and grame.

And wilt thou leave me thus?

Say nay! say nay!

கவிஞரின் விண்ணப்பத்தில் இருக்கும் தீவிரத்தையோ அதை வெளிப்படுத்துவதற்கான தேவையையோ நான் சந்தேகப்பட்டால் அவர் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அந்த பாடலின் வடிவத்துக்கு மட்டுமே பொறுப்பு கொண்டவர். அதன் உணர்வுகளுக்கல்ல. உணர்வுகள் அந்த பாடலை உருவாக்கி வடிப்பதில் வெறுமனே கச்சாப்பொருள் மட்டுமே. பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏற்ப நெருப்பு வெவ்வேறு வண்ணங்கள் கொள்கிறது. ஆனால் நாம் எரிபொருளை கவனிப்பதில்லை. அதை பற்றி விவாதிப்பதில்லை. நெருப்பையே கவனித்து விவாதிக்கிறோம். எப்படி ஒரு ரோஜாப்பூ அதன் சாரத்தைத்த்தண்டிய வடிவம் கொண்ட ஒன்றோ, அப்படி ஒரு பாடலென்பது அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வைத்தண்டி முற்றிலும் பெரிதான, வேறான ஒன்று. இனி முந்தைய பாடலைக் காட்டிலும் ஆழமான, உண்மையான உணர்வு வெளிப்பாடு அமைந்திருக்கும் மற்றொரு பாடலை பார்ப்போம்:

The sun,

Closing his benediction,

Sinks, and the darkening air

Thrills with the sense of the triumphing night,—

Night with her train of stars

And her great gift of sleep.

So be my passing!

My task accomplished and the long day done,

My wages taken, and in my heart

Some late lark singing,

Let me be gathered to the quiet West,

The sundown splendid and serene,

Death.

இந்தக் கவிதையில் வெளிப்பட்டுவரும் உணர்வுகளும் எண்ணங்களும் ஒரு உளவியலாளரின் பார்வைக்குறியவை. ஆனால் கவிதையென்னும்போது அதன் உணர்வுளும் எண்ணங்களும் அப்படியே அதன் கவித்தவத்தில் கரைந்துவிடுகிறது. உயிர்ப்புள்ள தாவரத்தில் கார்பன் உள்ளதென்ற ஞானம் அதை கரியாக்க எண்ணுபவனுக்கே முக்கியம். தாவரங்களின் மீது காதல் கொண்டவனுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.  

இதனால்தான் நிலத்தின் மேல் ஏதாவது புதியவகை கொள்கையின் உணர்வு, புயலாகக் கிளம்பும்போது அங்கே கலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கொள்கையுணர்வின் ஒற்றைபப்டையான தீவிரம், படைப்பின் அமர்த்தியான இணக்கத்தின் எல்லைகளை உடைத்து முந்தியடித்துக்கொண்டு தலை நீட்டுகிறது.  தரை மிதித்து புயல் எழுப்பித் தன்னை நாயகனாக நிறுத்திக்கொள்கிறது. அதன் எடையும் அழுத்தமும் படைப்பில் கைகூட வேண்டுய ஒருமையை அதன் பீடத்திலிருந்து அசைத்து பெயர்த்துவிடுகிறது.  இதே காரணத்தால் தான் தேவாலய பக்தி பாடல்களில் உண்மையான கவித்துவத்தன்மை இருப்பதில்லை. தேசபக்தி பாடல்களிலும் இதே குறையை காண முடிகிறது. திடீர் மழையில் பொங்கி எழும் மலைநீர் பெருக்குகள் இவை. தங்களுடைய பாதையிலுள்ளதை அடித்துச்செல்லும் வேகமே இவற்றின் குறிக்கோள், நீரின் ஒழுக்கு அல்ல. இக்கொள்கைகளின் உணர்ச்சிவேகம் வலிமையும் தன்னகங்காரமும் பொருந்தியவை. தங்களுடைய வீரியத்தை வெளிபடுத்த ஒரு அரங்கை அமைத்துக்கொடுக்கும் ஊடகம் மட்டுமே கவிதை என்ற பார்வையுண்டு இவற்றுக்கு. இப்படி எந்த கொள்கைக்காகவும் கவிதை ஒருநாளும் தன்னுடைய ஆன்மாவை பேரம்பேசி விற்றுவிடக்கூடாது. என்னதான் பொதுநலம், சமூகப்பயன் என்ற பெயர்களெல்லாம் சூடிக்கொண்டு வந்தாலும், அந்த சபலத்துக்கு கவிதை இடம் கொடுக்கவே கூடாது. கலைஞனுக்கும் கலைக்கும் இடையே காதலின் தூய ஊடகமான பழுதற்ற பற்றின்மை இருத்தல் வேண்டும். அந்தக்காதலை தூய்மையாக, முழுமையாக வெளிப்படுத்துவது மட்டுமே அந்தக்காதலில் ஈடுபடுவதன் குறிக்கோளாக இருக்க வேண்டும். தன் காதலை வேறெதன் சேவையிலும் பயனாக்கும் அற்ப எண்ணத்தை கலைஞன் அரவே ஒழித்துக்கட்ட வேண்டும். 

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆளுமை சுயநலத்தின் சிறிய வட்டத்திற்குள் வலம் வருகிறது. ஆகவே அந்த சிறிய இடைவெளிக்குள் நம்முடைய உணர்ச்சிகள், நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் நமக்கு பூதாகரமான முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன. அவை தங்களை ஓங்கி ஓங்கி முன்வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த ஓங்கியக் குரலுக்கு முன்னால் அந்த உணர்வுகளும் நிகழ்வுகளும் முழுமையுடன் கொள்ளும் ஒருங்கிணைவு நம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் கலையில் நம்முடைய ஆளுமை நித்தியத்தின் பற்றில்லா சுதந்திர வெளியில் சென்று நின்றுகொள்கிறது. அங்கே தன்னுடைய உண்மையான அளவை அது அறிந்துகொள்கிறது. நம்முடைய வீடு பற்றி எரியும்போது தீயின் தன்மையை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நட்சத்திரங்களில் உள்ள நெருப்பு அலகிலா பேரிருப்பின் உள்ளத்திலுள்ள நெருப்பே தான். அங்கே, அது படைப்பின் லிபியானத் தீ.

(பிரிட்டிஷ் கவிஞர்) மாத்யூ ஆர்னல்ட் நைட்டிங்கேல் பறவையை நோக்கிப்பாடும் பாடலின் வரிகள் இவை:

Hark! ah, the nightingale—

The tawny-throated!

Hark, from that moonlit cedar what a burst!

What triumph! hark!—what pain!

வலி நம்முடைய அன்றாடத்தின் எல்லைகளில் சென்று முட்டும் போது அது நம்முடைய நெஞ்சில் உதைத்து நம்மை பின்னால் தள்ளுகிறது. இது பெரும் வேதனையை உருவாக்கிறது. வாழ்க்கையின் குறுகிய வட்டத்தோடு அதன் தீவிரம் முரண்படுகிறது. அன்றாடத்தில் வலியென்பது ஒவ்வாத அபசுவரமாக ஆகிறது. ஆனால் பெரும் தியாகத்தின் வலியில் காலாதீதத்தின் பற்றில்லாமை உள்ளது. அங்கே பெருவலி தன்னுடைய பூரண கம்பீரத்துடன் வெளிப்படுகிறது. ஆதியந்தமில்லா இப்பெருவாழ்வின் விரிவில் அதற்கான இயல்பான இடம் அமைந்துவிடுகிறது. முகில் திரண்டு கருண்ட வானில் வெட்டும் மின்னல் அங்கே இணக்கத்துடன் வெளிப்படுகிறது. சோதனைச்சாலைக்கம்பியில் நிகழும் மின்னலுக்கு அந்த கம்பீரமும் இணக்கமும் இருப்பதில்லை. அந்த பெருவிரிவில் வைத்துப்பார்க்கையில் பெருவலிகளனைத்துமே பெருங்காதலுடன் பொருந்தி இசைவு கொள்கின்றன. எல்லா வலிகளுமே அன்பைக் காயப்படுத்துபவை. ஆகவே பெருவலியில் அன்பின் பரிபூரண இருப்பும் பரிபூரண அழகும் என்றென்றைக்குமாக வெளிப்படுகிறது. மாறாக, ஒரு வணிக ஒப்பந்தம் கசந்து போகும்போது ஏற்படும் வலியில் கம்பீரம் ஏதும் இல்லை. ஒன்றை ஒன்று கவ்விக் கடித்து உண்டு தீர்ப்பதிலேயே அது முடிகிறது. 

கவிஞன் பாடுகிறான்:

How thick the bursts come crowding through the leaves!

Eternal Passion!

Eternal Pain!

முதல்முடிவிலா காலாதீதப் பெருவெளியில் பொதிந்துள்ள பெருவலியைப்பற்றி வேதக்கவிஞர்கள் பாடுகிறார்கள். ஆம், “எல்லா படைப்பும் ஆனந்தத்திலிருந்து உதிப்பவை” என்று கூறிய அதே வேதக்கவிஞர்கள்.

ஸ தபஸ் தபத்வா சர்வம் அஸ்ரஜாத யாதிதம் கிஞ்ச

தன்னுடைய பெருவலியின் தாபத்திலிருந்து படைப்போன் இவ்வனைத்தையும் படைக்கிறான்.

படைப்பின் மையமான இத்தவம் ஒரே நேரம் பேரானந்தமும் பெருவலியும் தூண்டக்கூடியதாகும். இதைப்பற்றி வங்கநிலத்து நாடோடி மெய்ஞானிகள் பாடும் பாடல் ஒன்று:

ஆனந்தத்தின் இருளில் அமிழ்கின்றன என் கண்கள்

காரிருளின் பரவசத்தில் கமலமலரென இதழ்மூடுகிறது, என் இதயம்

அந்தப்படல் பேசும் ஆனந்தமானது நீலக்கடலைப்போல் ஆழமானது, நீலவானப்போல் முடிவில்லாதது. இரவின் கம்பீரமும் தீராப் பேரழகும் கொண்டது அது. அதன் முடிவில்லா இருள், பிரகாசமாக ஒளிரும் பற்பல உலகங்களை தனக்குள் பேரமைதியின் மகாத்மியத்தோடு அணைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெருவலிகளும் ரணவேதனைகளும் ஒன்றாகும் ஆனந்தப்பெருவெளி அது. 

தன்னுடைய படைப்பின் ஊற்றைப்பற்றி மத்தியக்கால இந்தியாவின் கவிஞன் ஒருவன் ஒரு ‘கேள்வி-பதில்’ கவிதை வழியாக சொல்கிறான் இப்படி:

பறவையே, நீ இரவெல்லாம் உன் கூட்டில் அடைந்திருந்தாயே, அப்போது உன் பாடல்கள் எங்கே இருந்தன?

உன்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அங்கே தானே இருந்தது?

நீ ஏன் உன் மனதை வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய், முதல்முடிவில்லாத வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய்?

பறவை சொல்கிறது:

எல்லைகளுக்குள்ளே ஓய்வாயிருந்தபோது மகிழ்ச்சியை அடைந்தேன்

ஆதியந்தமில்லாமைக்குள் பறந்தபோது என் பாடல்களைக் கண்டுகொண்டேன்!

ஒரு கருத்தை அதன் அன்றாடத்திலிருந்து விடுவித்து அதை பெருவிரிவின் சுதந்திர வெளியில் உயர்த்திப் பறக்கவிடுவதே கவிதை செய்யக்கூடியது. மெக்பெத்தின் அதிகார ஆசை, ஒத்தெல்லோவின் பொறாமை, இவை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட்டால் பரபரப்பான செய்திகளாக நின்றுவிடும். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அவ்வுணர்வுகள் தீப்பற்றி எரியும் நட்சத்திரக்கோவைகளுக்கிடையே எழுகின்றன. ஊர்வலமாக புறப்பாடு செல்கின்றன. அங்கே படைப்பு காலம்கடந்த விழைவுகளுடன், காலம்கடந்த வலிகளுடன் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

*

படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

குருதேவர் ரவீந்திரநாத் தாகூர்

[1]

அறிமுகம்

“நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து உடைந்து செல்லும், என்னை உருவாக்கி வைத்திருக்கும், இந்தப் பெருக்குகளை, ஒற்றைப்புள்ளியாக்கி நிறுத்துகிறது. 

என்னில் உள்ள இந்த ஒன்று – ஏகம் – பலவாகிப் பிளந்து பிரிந்து நிற்கும் இந்தப் பிரபஞ்சத்தை அறிகிறது. ஆனால் அது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளில் உள்ள ஒருமையை, ஏகத்தைத்தான் அறிகிறது. அது இந்த அறையை அறிகிறதென்றால், இந்த அறை அதற்கு ஏகமான, ஒருமையான ஓர் இருப்பு. அறை என்பது பலபொருட்களால் அமைக்கப்பட்டதென்றாலும், அப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறதென்றாலும், அறை என்பது ஒற்றை அறிதல் தான். என்னில் உள்ள ஏகம் ஒரு மரத்தை அறிகிறதென்றால், அது அறிவது ஒருமையைத்தான் – மரமாக வெளிப்படும் ஒருமை. 

எனக்குள் இருக்கும் ஒருமை, ஏகம், படைப்பூக்கமானது. படைப்பதென்பது அதற்கு ஒரு பொழுதுபோக்கு. லீலை. அதன்வழியே அது ஒருமையென்ற லட்சியத்துக்கு விதவிதமாக வடிவம் கொடுத்து விளையாடுகிறது. சித்திரங்களிலும் கவிதைகளிலும் இசையிலும் அது ஆனந்தத்தைக் கண்டடைகிறது. உள்ளுறையும் ஒருமைக்கு பூரணமான, பிரிதொன்றில்லாத வடிவத்தை கண்டடைவதன் வழியாக அது அந்த ஆனந்தத்தை அடைகிறது.

என்னில் உள்ள இந்த ஏகம், அதன் தற்புரிதலுக்காக அறிவில் ஒருமையை நாடுகிறது. அதன் குதூகலத்திற்காக ஒருமையின் சித்திரவடிவங்களை படைத்து விளையாடுகிறது. மட்டுமல்லாமல், அதன் நிறைவுக்காக பிரேமையின் ஐக்கியத்தை வேண்டுகிறது. அது தன்னை இன்னொருவரில் தேடுகிறது. இது ஓர் உண்மை. இதை நிரூபணமாக்கும் பேருண்மைகளின் ஊடகங்கள் நம்மிடத்தில் இல்லாதிருப்பின், இப்படிச்சொல்வது சற்று அபத்தமாகக் கூடப் படலாம். பிரேமத்தில் நாம் கண்டடையும் ஆனந்தம் பரமமானது, ஏனென்றால் அதுதான் பரமசத்தியமும் கூட. ஆகவேதான் உபனிடதங்களில் “அத்வைதம் அனந்தம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒருமை அலகில்லாதது. அவை “அத்வைதம் ஆனந்தம்” என்றும் கூறுகின்றன. ஒருமை ஆனந்தமானது, பிரேமைமயமானது.

அலகிலாத அந்த ஒன்றிற்கு பழுதில்லாத வடிவம் கொடுக்க, எண்ணிலாத இந்த பலவற்றில் இணைவையும் இசைவையும் உருவாக்குவதும், அலகிலாத பிரேமையென்ற ஆனந்தவெளியை, தன்னிருப்பைத் தியாகம் செய்து ஏய்துவதும் தான் தனிமனிதனாக, சமூகமாக, நாம் இலட்சியமென்று எடுத்துக்கொண்டு செய்யக்கூடியது.

ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளைப் பற்றி

[1]

சமீபத்தில் மறைந்த வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்தேன். ‘Shake the bottle and other stories’ என்ற தலைப்பில் பெங்குயின் வெளியீடாக அருணவா சின்ஹா மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கிண்டில் நூல். 21 கதைகளை கொண்டது. சர்மிளா தாகூரில் முன்னுரையுடன், எழுத்தாளரின் கட்டுரை ஒன்றுடன், இந்த நூல் அழகாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.*

ஆஷாபூர்ணாதேவி அவருடைய மூன்றடுக்கு நாவல் தொடர் வழியாகவே அதிகமும் அறியப்பட்டவர். பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), சுபர்ணலதா, பாகுல் கதா என்ற அந்த நாவல்கள் மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின் கதைகள். அவை நமக்கு நூறு வருட வங்க வறலாற்றை கடந்து வந்த உணர்வை அளிக்க வல்லது. ஆனால் ஆஷாபூர்ணாதேவியின் கைத்தேர்ச்சி தெரியும் இடம் எப்போதுமே அவர் மனித மனத்தை, ஒரு மனம் இன்னொரு மனத்துடன் உறவாடுகையில் கொள்ளும் மாற்றங்களை, திரிபுகளை எழுதும்போது தான். அவர் கண் மனிதர்களுக்குள்ளே பார்க்கும் ஃபோக்கசுடன் எப்போதும் கூர்மைபடுத்தப்பட்டுள்ளது. 

முதல் சபதத்தில் சத்தியவதியின் வளர்ச்சியும் மாற்றத்தையும் அவள் குடும்பத்துடனும் ஊருடன் கொள்ளும் உறவையுமே முதன்மையாகக் காட்சிப்படுத்துகிறார். படிப்புக்கான வேட்கையுள்ள எட்டு வயது சிறுமி, பழமைவாதியான கொடுமைக்கார மாமியாருடன் சேர்ந்து வாழ்வதன் வழியாகவே தன் உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்று உணர்ந்து வைராக்கியமாக வாழ்ந்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் அலையில் எழுகிறாள். கணவனை கல்கத்தாவில் வேலைத்தேடத் தூண்டுகிறாள். நகருக்குக் குடிபுகுகிறாள். நகரில் அவள் எல்லைகள் விரியத்தொடங்குகின்றன. கணவன் எதிர்ப்பை மீறி சிறு பள்ளியில் மாலை நேர ஆசிரியை ஆகிறாள். இந்த மனிதக் கதையாடலுக்குப் பின்னணியில், மங்கலாக, வங்காள மறுமலர்ச்சியும் இந்தியச் சுதந்திர போராட்டத்தின் உதயமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் வரலாற்றின் கதையை நேரடியாகச் சொல்வதில் ஆஷாபூர்ணா தேவி மெனக்கெடுவதில்லை. வரலாறென்பது தனிமனிதர்களின் விருப்புவெறுப்புஉறவுபிரிவுகளின் அலை என்ற அளவிலேயே வரலாறு அவர் கதைகளில் இடம்பெறுகிறது. இந்தக்கதை நிகழும் அதே தருவாயில் இந்தியா முழுவதும் எழுந்த சத்தியவதிகளை பற்றி நாம் நினைக்கையிலேயே அந்தக்கதையின் வரலாற்றுப் பரிணாமம் துலக்கம் பெறுகிறது.

தன்னுடைய சிறுகதைகளிலும் ஆஷாபூர்ணாதேவி மனித மனத்தின் வெவ்வேறு முகங்களை காட்சிப்படுத்துகிறார். நாவல் நமக்களிக்கும் வரலாற்றுச் சித்திரத்தைப்போலவே, சிறுகதைகள் வழியாக, இருபதாம் நூற்றாண்டு வங்கச் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவரால் நமக்கு அளிக்க முடிகிறது. ஆனால் இதுவும் பின்னணித் தோற்றம் தான். ஆஷாபூர்ணாதேவியின் கதைகளின் களன் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வீடும் மனையும் அங்கே வாழும் மனிதர்களும் தான். இந்தக்களத்தில் வைத்து மனித மனத்தையே அவர் எழுதுகிறார்.

அவர் கதைகளை வாசிக்கையில் ஓர் இறுக்கப்பட்ட உணர்வை தடுக்கமுடியவில்லை. ஏனென்றால் கதைகள் பெரும்பாலும் நிகழ்வது நான்கு சுவற்றிற்குள். வங்காள கூட்டுக்குடும்பத்தின் வேவுபார்க்கும் கண்களுக்கடியில். காட்சி நகரத்திற்கு மாறினாலும் இந்த அமைப்பு மாறுவதில்லை. ஒரு ஃபிளாட்டின் சுவர்கள் இன்னும் இறுக்கமாக மனிதர்களை பொத்திவைக்கிறது. வேலைக்காரிகள் கண்வாங்காமல் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். ஏகாந்தம் என்பதே இல்லை. எப்போதாவது கதை நகருக்குள் நகர்ந்தாலும் பேருந்துகள், டாக்சிகள், கட்டடங்கள் என்று அதே நெரிசல் உணர்வு ஏற்படுகிறது. 

ஒரு விதத்தில் இவர் கட்டும் களம் காஃப்காவையும் அசோகமித்திரனையும் நினைவு படுத்துகிறது. நவீனத்துவ யுகத்தில் மனிதன் அன்னியப்படும் சிக்கல் இக்கதைகள் சிலவற்றில் ஒரு சாயலாகக் காணமுடிகிறது (நீலக்குருதி, கதாநாயகன் போன்ற கதைகளில் வரும் வேலையில்லாத இளைஞர்கள்). கதைமாந்தர் பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக தனிமைப்பட்டிருக்கிறார்கள். 

ஆனால் ஒரு மாதிரி (template) நவீனத்துவப் படைப்பில் வருவதுபோல் நிறம், குணம் இல்லாத மனிதன் நவீன யுகத்தின், அபத்தத்தின் சுழற்சியில் மாட்டிக்கொள்ளும் கதையை ஆசிரியர் சொல்வதில்லை. இக்கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறங்கள் கொண்டவர்கள். ஒரு பண்பாட்டுப்புலத்திலிருந்து வந்து காலமாற்றத்தில் சிக்கிக்கொண்டவர்கள்.  அவர்களுடைய சிக்கலான மன அமைப்புகளை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமக்கு காட்சியாக்குகிறார். இந்தக் கதாபாத்திரங்களின் இறுக்கம் அவர்களுடைய சூழலிலிருந்து வருகிறதா, அல்லது அவர்களுடைய சொந்த மன அமைப்புகளிலிருந்தும், எண்ணச்சுழல்களிலிருந்தும் வருகிறதா என்று நம்மை எண்ண வைக்கிறது. 

நவீனத்துவப் படைப்பு மனிதன் என்ற தனியனை உலகு என்ற ஒற்றைப்படையான, புரிந்துகொள்ளமுடியாத சுழற்சியில் வைத்து ஆறாய்கிறது. ஆனால் இந்தக்கதைகளில் ஆசிரியர் மனிதனை தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கிடையே வைக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களின் அளவுக்கே ‘தான்’ என்ற உணர்வும், தனக்கான நியாயங்களும், ஆசைகளும் ஆத்திரங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும்போது புரிந்துகொள்ளவேமுடியாத இறுக்கமும் தனிமைப்படுத்தலும் உருவாகிறது. ஜனசமுத்திரத்தில் அன்னியப்படுகிறான் மனிதன். எங்கும் தண்ணீர், எங்கும் தண்ணீர், குடிக்க மட்டும் ஒரு துளி இல்லையே என்ற கவிஞனின் வரி நினைவுக்கு வருகிறது.

சிறந்த உதாரணம் ‘கழைக்கூத்து’ என்ற கதை (A Balancing Act). ஒரு குடும்பம். வேலைக்குப்போகும் குடும்பத்தலைவி, அவள் கணவர். அவர்களுக்கு நான்கு வயது மகள். மகளை ஒவ்வொருநாளும் வேலைக்காரியிடம் விட்டுச்செல்ல வேண்டும். வேலைக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் ஒத்துப்போகாது. குழந்தைக்கும் வேலைக்காரியை பிடிக்காது. ஆனால் சகித்துக்கொண்டு வாழ்வதைத்தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால் வேலைக்காரிக்கு இந்த வேலை தேவை. வீட்டுக்காரிக்கு வேறு ஆள் கிடைக்கமாட்டாள். மாமியார் ஊரில் இருக்கிறாள். அவர்கள் வாழும் பழையபாணி வீட்டுக்கு அவள் தான் சொந்தக்காரி.  அவள் ஒத்துக்கொண்டால் வீட்டை விற்றுவிட்டு, ஒரு ஃபிளாட் வாங்கி, ஒரு வண்டியும் வாங்கி வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மாமியார் பழையகாலத்து மனுஷி. கணவர் கட்டிய வீட்டை விற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். அதே நேரத்தில் மகன், மருமகளுடன் வந்து வாழவும் அவளால் முடியவில்லை. 

இந்தக்கதையில், ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கிடையே விடப்பட்டிருக்கிறார்கள். உணர்வுரீதியான நெரிசலில் வாழ்கிறார்கள். ஒருவர் தன் சுயவிருப்பை நிறைவேற்றிக்கொள்ளும் அளவு மற்றவர்களை சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. சமரசம் ஒன்றே சாத்தியம். மகன் அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே சமரசம் செய்ய வேண்டும். மனைவி வேலைக்காரிக்கும் குழந்தைக்கும் இடையே சமரசம் செய்யவேண்டும். வேலைக்காரி பிடிக்காத வேலைக்கும், தன் பிழைப்புக்கும் இடையே சமரசம் செய்தாக வேண்டும். குழந்தை தன் வயதை மீறி பெற்றோருக்கும் வேலைக்காரிக்குமிடையே சமரசத்தை அடையவேண்டும். மாபெரும் கழைக்கூத்தாட்டம்.

ஆனால் இத்தனை சமரசங்களை நிகழ்த்தும் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை தோற்கடிக்க நினைக்கிறார்கள். ஏமாற்றப்பார்க்கிறார்கள். கள்ளத்தனம் செய்கிறார்கள். பொய் சொல்கிரார்கள். குரூரமான உண்மைகளையும் சொல்கிறார்கள். இந்தப்பின்னலில் தங்களை  நிலைநாட்டிக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இறுக்கமடைகிறார்கள். 

ஆஷாபூர்ணாதேவியின் கதைமாந்தர்கள் அனைவருமே சாதாரண குடும்ப உருப்பினர்கள். ஓய்வுபெற்ற மாமனார்கள், வீட்டில் அன்னியப்படும் கணவர்கள், மனைவியர், மகள்கள், விதவையான அத்தைமார்கள், குழந்தைகள். ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதன் interest உள்ளது. கதைக்குள் ஆசிரியர் அதை தெளிவாகவே வரையருக்கிறார். வெவ்வேறு கதாபாத்திரங்களின் interest-கள் மோதுவதைத்தான் ஆசிரியர் கதையாக்குகிறார். கதாபாத்திரங்கள் தங்களுடைய interest-ஐ பாதுகாக்கக் கிட்டத்தட்ட போரே புரிகிறார்கள். உணர்வுரீதியாக, சமூகரீதியாக, அவர்கள் கையில் கிடைக்கும் அத்தனை ஆயுதங்களையும் பிரயோகிக்கிறார்கள். சில சமயங்களில் அத்துமீறி தரம் தாழ்ந்தும் கூட போகிறார்கள். அத்தனையும் மீறி திருப்தியுறாமல் இருக்கிறார்கள்.  

கணவன் பணிவாழ்க்கையில் முன்னேர நாட்டியமாடும் மனைவியை பகடைக்காயாய் பயன்படுத்துகிறார் (‘நறுமணத்தின் சாரம்’) . பணவெறி பிடித்த கணவனுக்கு பாடம் புகுட்ட வருமானத்துறை அதிகாரியான முன்னாள் காதலனை வீட்டுக்குள் அழைக்கிறாள் மனைவி (‘ஓரினப்பறவை’). விதவையான பிறகு வீட்டில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள கணவரின் தம்பியை முப்பது வருட நீதிமன்ற வழக்கில் கட்டிவைக்கிறார் அண்ணி (‘ஆயுதம்’). வீட்டில் வருமானமில்லாமல் வெகுநாள் தங்கிக்கொண்டிருக்கும் கணவரின் நண்பனை அப்புறப்படுத்த அவனைப்பற்றி பொல்லாப்புகளை பறப்புகிறாள் மனைவி (‘கதாநாயகன்’).

அதே சமயம் கதைமாந்தர் அனைவருக்கும் அவரவர் நியாங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் காலுக்கடியில் வழுக்கிச்செல்கையில் கையில் கிடைப்பதையெல்லாம் உடும்புப்பிடியுடன் பிடித்துக்கொள்ளும் வேகமே அவர்களில் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இயலாமையை சமாளிக்கத்தான் இத்தனை நாடகமாடுகிறார்களா என்று எண்ண வைக்கிறது. 

மகளின் கணவர் இறந்துபோகிறார். செய்தி வரும் தருணத்தில் மகள் அமர்க்களமாக அலங்காரம் செய்துகொண்டு அத்தை மகள் கல்யாணத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவளுடைய தாய் செய்தியை அவள் விழாவிலிருந்து திரும்பிய பிறகே சொல்கிறாள். சமூகமே கொந்தளிக்கிறது. மகள் தன் வாழ்வில் அனுபவிக்கவிருக்கும் கடைசி உற்சாகத் தருணம் அது. அதை முடிந்த அளவு நீட்டிக்க நினைப்பதில் என்ன தவறு என்று அம்மாக்காரி தருக்கி நிற்கிராள். அதில் உள்ளது அன்னையின் இயலாமை. கூடவே, ஒரு விதமான அறவுணர்வு. தன் வட்டத்திற்குள் அவள் செயல்படுத்தக்கூடிய ஒரு எதிர்ப்புவெறி. (‘ஏமாற்றுக்காரி’)

ஆக ஆஷாபூர்ணாதேவி சொல்லும் கதைகளின் களன் வேண்டுமென்றால் அடுக்களையும் மனையுமாக இருக்கலாம். ஆனால் அவர் சொல்லும் கதைகள் மனிதனின் இயலாமையைப் பற்றியவை. அதிகாரத்தை, அதிகார மோதல்களைப் பற்றியவை. 

அடுக்களையானாலும் சரி, நாடாளுமன்றம் ஆனாலும் சரி, போர்க்களம் ஆனாலும் சரி. மனித மனம் ஒன்று தான். மனிதன் தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கு இடையில் தான் வாழ்ந்தாகவேண்டும். அவனுக்குச் சுய பாதுக்காப்புணர்வு இருக்கும் வரையில், அவன் இயலாமையை உணரும் வரையில், அவன் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பான். அது நியாயமாக அமையும் போது போறாட்டமாகும். அத்துமீறும்போது சுரண்டலாகும். அதிகார வேட்கையாகும். இந்தப்போக்கை நாம் தொடர்ந்து வரலாற்றில் பார்க்கிறோம். ஆனால் இதற்கு ஆதாரமான அமையும் மனித மனத்தின் பரிணாமங்களை ஆஷாபூர்ணாதேவியின் எழுத்து துல்லியமாக, கருணையில்லாமல் அம்பலமாக்குகிறது. வேடங்கள் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு தருணத்தை இந்தக் கதைகள் நமக்கு அளிப்பதே இவற்றின் முதன்மைக் கொடை. 

ஆக, அவர் களத்தை வைத்துக்கொண்டு அவரை ‘சாதாரண அடுக்களை எழுத்தாளர்’ என்று குறைத்துவிடுவது அவருக்கு நீதி செய்வதல்ல. ஒரு கதையின் களத்தை மட்டுமே வைத்து அதை ‘நல்ல கதை’ அல்லது ‘சாதாரணக் கதை’ என்று தீர்மானித்துவிடமுடியாது. வெவ்வேறு சாதி,மதப்பின்னணிகளின் அடுக்களைகள், நகரங்களின் அலங்கோலங்கள், பயங்கரமான வன்முறைக் காட்சிகள், பாலியல் நாடகங்கள் என்று பல களங்களைக்கொண்டு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் அந்த களத்தில் ஆசிரியரின் ஃபோக்கஸ் எதில் உள்ளது என்பது தான் கேள்வி. களன் ஒன்றே கலையை ஆக்குவதில்லை. ஃபோக்கஸ், அது வெளிப்படும் விதம், இவையே கலையை தீர்மானிக்கிறது. 

ஆஷாபூர்ணாதேவி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இளம்பிராயத்திலேயே மணமாகி, ஆசாரமான குடும்பவாழ்க்கைக்குள் வாழ்ந்தபடி 3000 சிறுகதைகளும் 150க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். அவர் எழுதியதெல்லாம் அவர் கண்ட ‘அடுக்களைக் கதைகள்’ தாம். ஆனால் அவர் ஃபோக்கஸில் சிக்கியது மானுட மனங்கள். அவை போடும் நாடகங்கள். ஒன்றுடன் ஒன்று தொடுக்கும் சமர். நான் அவர் கதைகளை வாசிக்கையில் என் குடும்பத்தின் மனிதர்களை நினைத்துக்கொள்கிறேன். ஆனால் அதே அளவுக்கு நான் பணிபுரிந்த ஆராய்ச்சித்துறையின் முகங்களையும் நினைத்துக்கொள்கிறேன். பல மில்லியன் டாலர்களும் உலகப்புகழும் அறிவதிகாரமும் புழங்கும் நடைக்கூடங்களும் ஆஷாபூர்ணாதேவியின் அடுக்களை மனிதர்களால் தான் நிரம்பிவழிகிறது.


*அதென்ன ஆங்கிலத்தில் மட்டும் தான் படிப்பீர்களா?  ‘எலீட்’ எழுத்தாளரா நீங்கள்? என்று கேள்வியோடு எழும்பும் வாசக நண்பருக்கு – வெளிநாட்டில் வாழும் எலீட் எழுத்தாளர் ஆகிவிட்டதால் வேறு வழி இல்லை. கிண்டிலில் புத்தகங்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆஷாபூர்ணாதேவியின் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – வங்காளச் சிறுகதைகள் என்ற பெயரில். மொழிபெயர்ப்பாளர் புவனா நடராஜன். ஆனால் இந்தப்புத்தகம் கிண்டிலில் கிடைக்கவில்லை. ஆகவே அருணவா சின்ஹாவின் சமீபத்தைய ஆங்கில மொழியாக்கத்தையே நாடவேண்டியிருந்தது. அருணவா சின்ஹா இன்று இயங்கிவரும் ஆங்கில மொழிபெயர்ப்பார்ளர்களில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பு ஈடுபாடு உள்ளதால் அவருடைய மொழிபெயர்ப்பு உத்திகளை கவனிப்பதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆகவே ஆங்கிலத்தில் வாசித்தாலும் தமிழில் அதைப்பற்றி எழுதி என்னுடைய ‘எலீட்’த்தனத்தை இரண்டு மடங்காக்கிக்கொள்வது தான் இப்போதைக்கான பிரதிக்ஞை.

தோற்கடிக்கப்பட்டவர் – ஆஷாபூர்ணாதேவி

How I Became a Writer – Gabriel Garcia Marquez

(Originally published in New Yorker magazine, Oct 6, 2003)

“In any case, that story already belongs to the past,” he concluded. “What matters now is the next one.”

 

I never imagined that, nine months after I had completed secondary school, my first story would be published in Fin de Semana, the weekend literary supplement of El Espectador, in Bogotá, and the most interesting and demanding literary publication of the time. Forty-two days later, my second story was published. The most surprising thing for me, however, was an introductory note by the editor of the supplement, Eduardo Zalamea Borda (whose pen name was Ulises), the most lucid Colombian critic at the time, and the one who was most alert to the appearance of new trends.

The way in which all this happened was so unexpected that it is not easy to recount. In February of 1947, I matriculated in the faculty of law at the Universidad Nacional of Bogotá, as my parents and I had agreed. I lived at the very center of the city, in a pensión on Calle Florián which was occupied for the most part by students who were, like me, from the Atlantic Coast. On free afternoons, instead of working to support myself, I read either in my room or in the cafés that permitted it. The books I read I obtained by chance and luck, and they depended more on chance than on any luck of mine, because the friends who could afford to buy them lent them to me for such limited periods that I stayed awake for nights on end in order to return them on time. But, unlike the books I had read at school, in Zipaquirá, which belonged in a mausoleum of consecrated authors, these were like bread warm from the oven, printed in Buenos Aires in new translations after the long publishing hiatus caused by the Second World War. In this way, I discovered, to my good fortune, the already very much discovered Jorge Luis Borges, D. H. Lawrence and Aldous Huxley, Graham Greene and G. K. Chesterton, William Irish and Katherine Mansfield, and many others.

For the most part, these new works were displayed in the unreachable windows of bookstores, but some copies circulated in the student cafés, which were active centers of cultural dissemination for university students from the provinces. Many of those students reserved their tables year after year and received mail and even money orders at the cafés. Favors from the proprietors or their trusted employees were instrumental in saving a good number of university careers, and quite a few professionals in the country may owe more to their café connections than they do to their almost invisible tutors.

My favorite café was El Molino, the one frequented by older poets, which was only two hundred metres or so from my pensión, on the corner of Avenida Jiménez de Quesada and Carrera Séptima. Students were not allowed to reserve seats at El Molino, but we could be sure of learning more from the literary conversations we eavesdropped on as we huddled at nearby tables and learning it better than in textbooks. It was an enormous café, elegant in the Spanish style, and its walls had been decorated by the painter Santiago Martínez Delgado with episodes from Don Quixote’s battle against the windmills. Though I did not have a reserved place, I always arranged for the waiters to put me as close as possible to the master León de Greiff—bearded, gruff, charming—who would begin his tertulia, his literary talk, at dusk with some of the most famous writers of the day, and end it with his chess students at midnight, awash in cheap liquor. Very few of the great names in the country’s arts and letters did not sit at that table at least once, and we played dead at ours in order not to miss a single word. Although they tended to talk more about women and political intrigues than about their art or work, they always said something that was new to us.

The most attentive of us were from the Atlantic Coast, united less by Caribbean conspiracies against the Cachacos—people from the sierra—than by the vice of books. One day Jorge Álvaro Espinosa, a law student who had taught me to navigate the Bible and made me learn by heart the names of Job’s companions, placed an awesome tome on the table in front of me and declared, with the authority of a bishop, “This is the other Bible.”

It was, of course, James Joyce’s “Ulysses,” which I read in bits and pieces and fits and starts until I lost all patience. This was premature brashness. Years later, as a docile adult, I set myself the task of reading it again in a serious way, and it not only resulted in the discovery of a genuine world that I had never suspected inside me but also provided me with invaluable technical help in freeing language and handling time and structure in my own books.

One of my roommates at the pensión was Domingo Manuel Vega, a medical student who had been my friend ever since our boyhood days in the town of Sucre and who shared my voracity for reading. One night, Vega came in with three books that he had just bought, and he lent me one, chosen at random, as he often did, to help me sleep. But this time the effect was just the opposite: I never slept with my former serenity again. The book was Franz Kafka’s “The Metamorphosis”—in the translation published by Losada in Buenos Aires—and it determined a new direction for my life from its opening line, recognized today as one of the great devices in world literature: “As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect.”

These were mysterious books whose dangerous precipices were not only different from but often contrary to everything I had known until then. They showed me that it was not necessary to demonstrate facts: it was enough for the author to have written something for it to be true, with no proof other than the power of his talent and the authority of his voice. It was Scheherazade all over again—not in her millenary world, where everything was possible, but in an irreparable world, where everything had already been lost.

When I finished reading “The Metamorphosis,” I felt an irresistible longing to live in that alien paradise. The new day found me at the portable typewriter that Domingo Manuel Vega had lent me, trying to write something that would resemble Kafka’s tale of a poor bureaucrat turned into an enormous cockroach. In the days that followed I did not go to the university for fear the spell would be broken, and I continued, sweating drops of envy, until Eduardo Zalamea Borda published in his pages a disconsolate article lamenting the lack of memorable names among the new generation of Colombian writers, and the fact that he could detect nothing in the future that might remedy the situation. I do not know with what right I felt challenged, in the name of my generation, by the provocation in that piece, but I took up the story again in an attempt to prove him wrong. I elaborated on the plot idea of the conscious corpse in “The Metamorphosis,” but relieved the story of its false mysteries and ontological prejudices.

Still, I felt so uncertain that I did not dare talk it over with any of my tablemates at El Molino. Not even with Gonzalo Mallarino, my fellow-student at the faculty of law, who was the only reader of the lyrical prose pieces I wrote to help me endure the tedium of my classes. I reread and corrected my story until I was exhausted, and at last I wrote a personal note to Eduardo Zalamea—whom I had never seen—of which I cannot recall even a single word. I put everything in an envelope and took it in person to reception at El Espectador. The concierge authorized me to go up to the second floor and hand the letter to Zalamea himself, but I was paralyzed at the mere idea. I left the envelope on the concierge’s desk and fled.

This happened on a Tuesday, and I was not troubled by any presentiments regarding the fate of my story. I was certain that, in the event it was published, it would not happen very soon. In the meantime, for two weeks, I rambled and roamed from café to café to allay my Saturday-afternoon apprehension, until September 13th, when I went into El Molino and collided with the title of my story printed across the full width of El Espectador, which had just come out: “The Third Resignation.”

My first reaction was the devastating realization that I did not have five centavos to buy the paper. This was the most explicit symbol of my poverty, because, in addition to the newspaper, many basic things in daily life cost five centavos: the trolley, the public telephone, a cup of coffee, a shoeshine. I rushed out to the street with no protection against the imperturbable drizzle, but in the nearby cafés there was no one I knew who could give me a charitable coin. And I did not find anyone in the pensión at that dead hour on a Saturday except the landlady, which was the same as not finding anyone, because I owed her seven hundred and twenty times five centavos for two months of room and board. When I went out again, prepared for anything, I encountered a man sent by Divine Providence: he was getting out of a cab, holding El Espectador in his hand, and I asked him straight out if he would give it to me.

And so I read my first story in print, with an illustration by Hernán Merino, the official sketch artist for the paper. I read it in a single breath, hiding in my room, my heart pounding. In each line I discovered the crushing power of print, for what I had constructed with so much love and pain as a humble imitation of a universal genius was revealed to me as an obscure, weak monologue, barely sustained by three or four consolatory sentences. Almost twenty years went by before I dared to read it a second time, and my judgment then—untempered by compassion—was even less indulgent.

The most difficult thing was the avalanche of friends who invaded my room with copies of the newspaper and glowing praise for a story that I was sure they had not understood. Among my fellow-students at the university, some appreciated it, others were puzzled by it, and others with more reason did not read past the fourth line, but Gonzalo Mallarino, whose literary judgment it was not easy for me to question, admired it without reservation.

My greatest uneasiness had to do with the verdict of Jorge Álvaro Espinosa, whose critical blade was dangerous even beyond our immediate circle. I had contradictory feelings: I wanted to see him right away to resolve my uncertainty once and for all, but at the same time the idea of facing him terrified me. He disappeared until Tuesday, which was not unusual for an insatiable reader, and when he reappeared at El Molino he began talking to me not about the story but about my audacity.

“I suppose you realize the trouble you got yourself into,” he said, fixing his green king-cobra eyes on mine. “Now you’re in the showcase of recognized writers, and there’s a lot you have to do to deserve it.”

His was the only opinion that could affect me as much as that of Ulises, and I was petrified. But before he finished speaking I decided to preëmpt him with what I considered then, and have always considered since, to be the truth: “That story is a piece of shit.”

He replied with immutable control that he could not say anything yet because he had had time only to glance at it. But he explained that, even if it was as bad as I said, it was not bad enough for me to sacrifice the golden opportunity that life was offering me.

“In any case, that story already belongs to the past,” he concluded. “What matters now is the next one.”

I was flabbergasted and foolish enough to look for arguments to the contrary, until I understood that no advice I heard would be more intelligent than his. He expounded on his unshakable idea that you had to conceive of the story first and then the style, but that each depended on the other in a kind of mutual servitude that was the magic wand of the classics. He also spent some time on his opinion, which he had often repeated, that I needed to read the Greeks in a profound, unbiased way, and not just Homer—the only one I had read, because I was required to for the baccalaureate. I promised I would, and I wanted to hear other names, but he changed the subject and began to talk instead about André Gide’s “The Counterfeiters,” which he had read that weekend. I never found the courage to tell him that our conversation might well have determined the course of my life. I stayed up all night making notes for my next story, which would not have the meanders of the first.

I suspected that those who talked to me about the story were impressed less by the story itself—which they had perhaps not read and had, I was sure, not understood—than by its being published with such unusual fanfare on so important a page. To begin with, I realized that my two great defects were the two greatest defects possible: the clumsiness of my writing and my ignorance of the human heart. And both were more than evident in my first story, which was a confused, abstract meditation made worse by my abuse of invented emotions.

Searching my memory for situations from real life for the second story, I remembered that one of the most beautiful women I had known as a child had told me she wished she could be inside the very handsome cat that she was caressing on her lap. I asked her why, and she answered, “Because it is more beautiful than I am.” This gave me a point of departure for the second story, as well as an attractive title: “Eva Is Inside Her Cat.” The rest, like the previous story, was invented out of nothing and, for the same reason—as we liked to say in those days—it carried within itself the seeds of its own destruction.

This story was published with the same fanfare as the first, on Saturday, October 25, 1947, and illustrated by the painter Enrique Grau, a rising star in the Caribbean sky. I was struck that my friends accepted this as a routine occurrence and me as a renowned writer. I, on the other hand, suffered over the errors, doubted the successes, but managed to keep my hope alive. The high point came a few days later, when Eduardo Zalamea, employing his usual pseudonym, Ulises, wrote a note in his daily column in El Espectador. It went straight to the point: “Readers of Fin de Semana, the literary supplement of this newspaper, will have noted the appearance of a new and original talent with a vigorous personality.” And farther on: “In the imagination anything can happen, but knowing how to show with naturalness, simplicity, and without fuss the pearl produced there is not something that all twenty-year-old boys just beginning their relationship with letters can accomplish.” And he concluded without hesitation: “In García Márquez a new and notable writer has been born.”

 

The note brought me a shock of happiness—how could it not!—but at the same time it disturbed me that Zalamea had not left himself any way out. Now that he had said what he had said, I was obliged to interpret his generosity as a call to my conscience that would last the rest of my life.

In spite of my chronic absenteeism and judicial negligence, I passed the easy first-year law courses thanks to overheated last-minute cramming, and the more difficult ones by using my old trick of eluding the question with clever devices. The truth is, I was not comfortable in my own skin and did not know how to continue groping my way along that dead-end street. I understood the law less and had much less interest in it than in any of the subjects I had studied at the liceo, and I felt I was enough of an adult to make my own decisions. In short, after sixteen months of miraculous survival, all I had gained was a group of good friends for the rest of my life.

My scant interest in the law was even scantier after the note by Ulises appeared. At the university, some of the other students began to call me Maestro and to introduce me as a writer. This coincided with my resolve to learn how to construct a story that was both credible and fantastic but had no cracks. I had several ideal distant models, such as Sophocles’ “Oedipus Rex,” whose protagonist investigates the murder of his father only to discover that he himself is the murderer; “The Monkey’s Paw,” by W. W. Jacob, the perfect story in which everything that happens is accidental; Maupassant’s “Boule de Suif”; and so many other great sinners, may God keep them in His holy kingdom.

I was involved in this one Sunday night when at last something happened to me that deserved to be recounted. I had spent almost the entire day venting my frustrations as a writer with Gonzalo Mallarino at his house on Avenida Chile, and when I was returning to the pensión on the last streetcar a flesh-and-blood faun got on at the Chapinero station. No mistake: I said a faun. I noticed that none of the few passengers on the streetcar at midnight seemed surprised to see him, and this made me think that he was just one of the men in costume who sold a variety of things on Sundays in the children’s parks. But reality convinced me that I should have no doubts: his horns and beard were as wild as those of a goat, and when he passed by me I could smell the stink of his pelt. With the manners of a good paterfamilias, he got off before Calle 26, the street where the cemetery was, and disappeared among the trees in the park.

After half a night of being awakened by my tossing and turning, Domingo Manuel Vega asked me what was wrong. “It’s just that a faun got on the streetcar,” I told him, half asleep. He was wide awake when he replied that if it was a nightmare it must be due to the poor digestion typical of Sundays, but if it was the subject for my next story he thought it was fantastic. The next morning, I did not know if I had seen a faun on the streetcar or if it had been a Sunday hallucination. I began by admitting to myself that I had fallen asleep, tired at the end of the day, and had a dream that was so vivid I could not separate it from reality. But, in the end, the essential thing for me was not whether the faun had been real but that I lived the experience as if he were. And for the same reason, real or dreamed, it was not legitimate to consider this as a bewitchment of the imagination; it was, in effect, a marvellous experience in my life.

I wrote the story the next day in one sitting, put it under my pillow, and read it and reread it for several nights before I went to sleep and in the mornings when I woke up. It was a bare, literal transcription of the episode on the streetcar, just as it had occurred and in a style as innocent as that of a baptism announcement on the society page. At last, hounded by new doubts, I decided to submit it to the infallible test of print, not in El Espectador but in the literary supplement of El Tiempo. Perhaps this was a way for me to face a judgment different from that of Eduardo Zalamea, and not involve him in an adventure that he had no reason to share. I sent the story with a friend from the pensión, along with a letter for Don Jaime Posada, the new and very young editor of the Suplemento Literario of El Tiempo. But the story was not published and my letter was not answered.

The publications in El Espectador, on the margins of literary success, created other, more terrestrial and amusing problems for me. Misguided friends would stop me in the street to ask for the loans that would save them, since they could not believe that a writer presented with so much prominence had not received enormous sums for his stories. Very few believed me when I told them the truth: I had never been paid a centavo for the stories and had not expected to be, because that was not the custom in the country’s press. Even more serious was my papa’s disappointment when he realized I could not take over my own expenses at a time when three of his eleven children were in school. The family sent me thirty pesos a month. The pensión alone cost me eighteen, with no right to eggs at breakfast, and I always found myself obliged to dip into that money for unforeseen expenses. I do not know where I had acquired the habit of making unconscious sketches in the margins of newspapers, on the napkins in restaurants, on the marble tables in cafés. But a casual acquaintance from El Molino, who had enough influence at a ministry to be placed as a draftsman without having the slightest idea how to draw, proposed that I do his work for him and we divide the salary. Never again in my life was I so close to being corrupted, but not so close that I repented.

My interest in music also grew at this time, as the popular songs of the Caribbean—which I had taken in with my mother’s milk—were making their way into Bogotá. The radio program with the largest audience was “The Coastal Hour,” hosted by Don Pascual Delvecchio, a kind of musical ambassador from the Atlantic Coast. It aired on Sunday mornings and became so popular that we students from the Caribbean would go to the offices of the radio station to dance until late in the afternoon. That program was the origin of the immense popularity of our music in the interior of the country, and later in its most remote corners; it even provided students from the coast with a means of social advancement in Bogotá.

The only disadvantage for Caribbean students in the capital was the spectre of forced marriage. I do not know what wicked precedents had advanced the coastal belief that the girls in Bogotá were loose with boys from the coast and set traps for us in bed so that we would be obliged to marry them. And they did this not for love but because they hoped to live with a window facing the sea. I never believed it. On the contrary, the most disagreeable memories of my life are of the sinister brothels on the outskirts of Bogotá, where we would go to drain away our gloomy bouts of drunkenness. In the most sordid of them, I almost left behind the little life I had in me when a woman I had just been with appeared naked in the corridor, shouting that I had stolen twelve pesos from a drawer in her dressing table. Two thugs from the house knocked me down, and, not satisfied with emptying my pockets of the two pesos I had left after a session of ruinous lovemaking, they stripped me of everything, including my shoes, to search every inch for the stolen money. They had decided not to kill me but to turn me over to the police when the woman remembered that she had changed her hiding place the day before, and she found the money there, intact.

Not long after that, I decided at last not to go on wasting time in the faculty of law, but I did not have the courage to confront my parents once and for all. They told me they were so satisfied with the results of my baccalaureate and my first year as a law student that they sent me—in the care of my brother Luis Enrique, who had come to Bogotá and found a good job in February, 1948—the most lightweight and modern typewriter on the market as a surprise gift. It was the first typewriter I ever owned, and also the most unfortunate, because that same day we pawned it for twelve pesos in order to continue a welcoming party with my brother and my friends from the pensión. The next day, with aching heads, we went to the pawnshop to make certain that the typewriter was still there with its seals unbroken, and to insure that it would remain in good condition until the money to redeem it rained down on us from Heaven. We had a good opportunity with what my friend the false draftsman paid me, but at the last minute we decided to put off redeeming it. Each time my brother and I passed the pawnshop, together or alone, we would confirm from the street that the typewriter was still there, wrapped like a jewel in cellophane paper with an organdy bow, among rows of well-protected household appliances. After a month, the joyous calculations we had made in the euphoria of our drunkenness were still unfulfilled, but the typewriter was safe and sound in its place and could remain there for as long as we paid the quarterly interest. ♦

(Translated, from the Spanish, by Edith Grossman.)

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்

(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் பேசியதன் கட்டுரை வடிவம். நன்றி: jeyamohan.in)

அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை,  அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல முடியாது. அங்கிருந்தே இந்திய பின்புலத்தில் அறிவியல் புனைவுக்கான இடம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள முடியும். மேற்கத்திய அறிவியக்க வரலாற்றின் ஆழத்தில் உள்ள ஒரு அடிப்படை முரணின் புரிதல் இதற்கு தேவையாகிறது.

மேற்கத்திய அறிவியக்க வரலாற்றில் பொதிந்துள்ள அந்த மைய முடிச்சை மறுமலர்ச்சி காலகட்டத்து  ஓவியர் ரஃபேல் வரைந்த ‘The School of Athens’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தில் காணலாம். கிரேக்க மரபின் இரு பெரும் தத்துவவாதிகளை மையத்தில் அமைத்து அவர்களை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஓவியம் இது. ஓவியத்தின் இடது பக்கத்தில் பிளாட்டோவும், வலது பக்கத்தில் அரிஸ்டாட்டிலும் இடம்பெருகின்றனர்.

இடது பக்கம் நிற்கும் பிளாட்டோ தன்னுடைய வலதுகையின் ஆட்காட்டி விரலை செங்குத்தாக தூக்கி வானை சுட்டும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வலதுபுறமாக நிற்கும் அரிஸ்டாட்டில் தன்னுடைய உள்ளங்கையை கிடைமட்டமாக, நிலத்துக்கு சமதளமாக வைத்துள்ளார். பிளாட்டோ வானையும் நெருப்பையும் குறிக்கும் நிறங்களிலும், அரிஸ்டாட்டில் அதற்கு மாற்றாக நீரையும் நிலத்தையும் குறிக்கும் நிறங்களிலும் உடை அணிந்தபடி காட்சிபடுத்தப்பட்டுள்ளார்கள்.

பிளாட்டோவின் பக்கமாக ஓவியத்தின் இடதுபுறத்தில் பெரும்பாலும் தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவர்களை ஒருவிதத்தில் கனவுஜீவிகள் என்று சொல்லலாம். தத்துவதர்க்கமும் அகக்காட்சியும் கற்பனையும் உள்ளுணர்வும் சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள்.

அரிஸ்டாட்டிலின் பக்கமாக ஓவியத்தின் வலதுபுறத்தில் பெரும்பாலும் அறிவியலாளர்களையும், கணிதவல்லுனர்களையும், வானியல் ஆராய்ச்சியாளர்களையும் ரஃபேல் காட்சிப்படுத்தியுள்ளார். தூய அறிவின் பார்வையை சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள் என்று பொதுமைபடுத்தலாம்.

இரண்டு கலாச்சாரங்கள்

இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிளாட்டோவின் தரப்புக்கும் அரிஸ்டாட்டிலின் தரப்புக்கும் பொதுவாக ஒரு முக்கிய அடிப்படை வேறுபாட்டை முன்வைக்கலாம். பிளாட்டோவின் தரப்பு அறிதலுக்கு தன் முக்கிய பிரமாணமாக உள்ளுணர்வையும் உபமானத்தையும் நம்பியிருக்கிறது. அரிஸ்டாட்டிலின் தரப்பு நேரடி புலன் அனுபவத்தை, பிரத்யட்சத்தை, மட்டுமே தன்னுடைய பிரதான அறிதல் பிரமாணமாக கொண்டுள்ளது.

தத்துவை-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல் நோக்குக்கும் உள்ள முக்கியமான மைய வேறுபாடு இதுதான். மொத்த மேற்குலக அறிவியக்க வரலாற்றை இந்த முரணின் நீட்சியாக புரிந்துகொள்ளலாம்.

மேற்குலகில் இதே முரண் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்து வருகிறது. கிறித்துவம் தோன்றிய பிறகு மதம் x அறிவியல் என்ற முரணும் இந்த அடிப்படை அறிதல்முறை விரிசலின் ஒரு தரப்பு என்று வாதிடலாம். 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவொளி காலம் தொடங்கியது. கற்பனாவாத பண்புகளை வலியுறுத்திய ரூஸோ ஒரு புறமும், தூய அறிவின் அதிகாரத்தை விதந்தோதிய வால்டேர் மறுபுறமும் அக்காலகட்டத்தின் முகங்களாக ஆகினர். தத்துவ தரப்பில் இதே முரண் கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் என்று பரிணமித்ததாக சொல்லலாம்.

ஒரு வகையில் ரூசோவிலிருந்து கற்பனாவாத கவிஞர்களும், நவீன இலக்கியவாதிகளும் உருவாகி வந்ததாக சொல்லலாம். வால்டேரின் தூய அறிவுத்தறப்பின் நீட்சியாக தர்க்க நேர்நிலையாளர்கள் (logical positivists) உருவாகிவந்தனர். அவர்களிடமிருந்து நவீன அறிவியலாளர்கள் உருவாகி வந்தனர்.

இன்று நம் உலகத்தை கட்டமைக்கும் முரண் தத்துவம்-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல்-தொழில்நுட்ப நோக்குக்குமானது. ஆனால் அடிப்படையில் இது அறிதல்முறை சார்ந்த, உலகுநோக்கு சார்ந்த முரண் என்பது இந்த விவரிப்பு மூலம் தெளிவாகியிருக்கும்.

இந்த முரணை முன்னிட்டு சி.பி.ஸ்னோ என்ற அறிஞர் 1950-களில் ‘இரண்டு கலாசாரங்கள்’ (The Two Cultures) என்ற பெயரில் ஒரு முக்கியாமன் கட்டுரையை எழுதினார். சி.பி.ஸ்னோ ஒரு அறிவியலாளர் மட்டுமல்லாது ஒரு புனைவெழுத்தாளரும் கூட. அவர் இந்த முரணை முன்வைத்து விரிவாக பேசிய காலம் குறிப்பிடத்தக்கது.

1950-கள் இரண்டு உலகப்போர்கள் முடிந்திருந்த காலகட்டம். போர் காலங்களில் எப்போதுமே தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்பது வரலாற்றுண்மை. எனினும் இரண்டு உலகப்போர்களுக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்களின் வீச்சில் தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற வகையில் அந்த காலகட்டம் நமக்கு முக்கியமானது. இந்த காலகட்டத்துக்கு பிறகு அறிவியலும் சரி, மானுடவியலும் (humanities) சரி, மேலும் மேலும் நுட்பமாகி தனித்தனி அறிவுத்துறைகளாக பிரிந்துசென்றது.

இன்று ஒரு சராசரி அறிவியலாளருக்கு மொழியியல் சார்ந்தோ குறியீட்டியல் சார்ந்தோ பின்நவீனத்துவம் சார்ந்தோ அடிப்படை அறிமுகம் இல்லை. மானுடவியல் தரப்பில் இயங்கும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்களுக்கும் பெரும்பாலும் அறிவியலின் அறிதல்முறை சார்ந்த புரிதல் இல்லை. அறிவியலில் நிகழும் பாய்ச்சல்கள் ஒரு அறிவியக்கத்தின் வளர்ச்சியின் படிநிலையாக அல்லாமல் பெரும்பாலும் வெறும் தகவல்களாகவே ஒரு பொது வாசகருக்கு இன்று வந்து சேர்கிறது. இந்த பின்னணியில் தான் இன்று அறிவியல் புனைக்கதைகள் எழுதப்படுகின்றன.

அறிவியல் புனைவு என்ற இலக்கிய வகைமை

சி.பி.ஸ்னோ ‘இரண்டு கலாசாரங்கள்’ கட்டுரையை எழுதிய 1950-கள் அறிவியல் புனைவெழுத்தின் பொற்காலம் என்று இன்று சொல்லப்படுகிறது (‘Golden Age of Science Fiction’). அந்த காலகட்டத்தில் அறிவியல்புனைவு என்ற இலக்கிய வகைமை (genre fiction) ஓர் இயக்கமாக தொடர்ந்து எழுதப்பட்டது.  அதன் பிறகு இன்று வரை தொடர்ந்து வெவ்வேறு வகையில் புனைவுக்குள் அறிவியல் புகுத்தப்பட்டு கதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடுகிறது. அடிப்படையிலேயே ஒரு அறிதல் முறை என்ற ரீதியல் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள முரண், அறிவியல் புனைவின் கட்டுமானத்திலும் வடிவிலும் கதைச்சமைப்புகளிலும் பரிணமிக்கிறது. என்னேரமும் பூசலிட்டுக்கொள்ளும் இருவேறு ஆளுமைகளான அம்மா-அப்பாவுக்கு பிறந்த குழந்தையாக அறிபுனை வடிவை காணலாம். அவர்களது தனித்தன்மைகளும் சரி, முரண்களும் சரி, அதில் வெளிப்படுகிறது.

ஒரு உதாரணமாக, ஒரு எளிய கதைவடிவை முன்வைக்கலாம். எதிர்காலத்தில் ஒரு அவலச்சூழலின் (dystopia) பின்னணியில், மானுடரில் பலரும் படிப்படியாக தங்களது கண்பார்வையை இழக்கத்தொடங்குகிறார்கள். இதற்குக் காரணம் நாம் சாதாரணமாக காணும் நிற-ஒளிவரிசைப் பட்டையை உள்வாங்கும் கண்ணின் செல்கள் அறியமுடியா காரணத்தால் திடீரென்று மரித்துப்போகின்றன என்று கண்டுகொள்ளப்படுகிறது.

இதனை ஈடுசெய்ய ஒரு அறிவியலாளர் பாம்பின் கண்களிலிருந்து ஒரு புரோட்டீனை எடுத்து மனிதக்கண்ணுக்குள் பொருத்துகிறார். இந்த புரோட்டீன் நிறவரிசைப் பட்டையைத்தாண்டி, அகச்சிவப்பு (infra-red) ஒளியை வெப்பமாக கண்டடையக்கூடியது. இதன் மூலம் அந்த மனிதருக்கு வேறுவிதமான பார்வை கிடைக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு அசலான அறிவியல் ஊகம். கண்பார்வை இழந்தவர்களுக்கு ஒரு மாற்று சிகிச்சையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இதை நோக்கி சோதனைகள் மேற்கொண்டுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில், புனைவின் பரப்புக்குள் இது எழுப்பும் கேள்விகள் எல்லாமே மேலதிக அர்த்தம் கொண்டது. கவித்துவமானது. பார்வை என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வியை கையாள்வது. ‘பாம்புக்கண்’ என்ற குறியீடு அந்த புனைவுலகில் என்ன பொருள் கொள்கிறது என்பதிலிருந்து விரியும் இக்கதை. சுற்றியிருக்கும் வெப்பத்தை மட்டும் உள்வாங்குகையில் ஒரு மனிதனின் பார்வை எப்படி மாறுபடும்? அவனால் காம-குரோத-மோகங்களை எளிதாக கண்டுகொள்ளமுடியுமா? இந்த நுண்ணுணர்வுக்கு புனைவு கட்டமைக்கும் உலகப்பரப்பில் அர்த்தமென்ன? அந்த உலகின் அறிவியல்நோக்கை பற்றிs இந்தக்கதையில் வரும் ‘மாற்றுப்பார்வை’ என்ன சொல்ல வருகிறது? இப்படியான கேள்விகளை அறிவியலாளர் ஆய்வுகூடத்தில் கேட்கமுடியாது ஆனால் புனைவெழுத்தாளர் புனைவுபரப்புக்குள் சோதனை நிகழ்த்தி கேட்டுப்பார்க்கலாம்.

சாராம்சமாக, அறிபுனை என்ற இலக்கிய வகைமையை மூன்று அலகுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்:

  1. அறிபுனை என்பது அறிவியல் x கலை/இலக்கியம் என்ற முரணியக்கம் சார்ந்து இயங்கும் ஒரு வடிவம்
  2. இரண்டு பெரும் அறிதல் முறைகளின் செல்வாக்கு அதனில் இருக்கிறதென்பதால், வாழ்வின், மானுடத்தின் ‘பெரிய கேள்விகளை’ கேட்டு கண்டறியும் சாத்தியம் இவ்வடிவினில் இயல்பாகவே அடங்கியுள்ளது
  3. ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடும்.

 அறிவியல் புனைவு என்றால் என்ன?

அறிவியல் புனைவு என்றால் என்ன என்று வரையறுக்க முற்படும்போது ஒரு சிக்கல் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் வடிவம் மாறிவந்துள்ளது என்பதால் வரையறைகளும் அருதியாக இல்லை. ஒரு தொடக்கமாக, அறிபுனை என்னும் வடிவம் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று ஆராயலாம்.

அடிப்படையில், அறிபுனை என்பது:

  1. அறிவியல் கூறுகளை ஏதோ வகையில் தன்னில் கொண்டுள்ள ஒரு கதை
  2. ஆனால் அது அறிவியல் அல்ல. அதன் தர்க்க முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. நிரூபணவாதம், பொய்பித்தல்வாதம் போன்றவற்றுக்கு அறிவியல் புனைவில் மையமான இடம் இல்லை. அதன் தர்க்கமுறை புனைவு சார்ந்தது. குறியீடுகள் சார்ந்தது. அறிவியலின் தர்க்கத்தை போல அது புனைவுபடுத்தி கதைக்குள் ஒன்றை கட்டமைக்க முயலும் (அசிமோவின் மூன்று விதிகளைப்போல). இன்று எழுதப்படும் அறிவியல் கதைகள் அறிவியல் தர்க்கமே குறியீடு ஆகும் தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன .
  3. பெரும்பாலும் அறிவியல் கதைகளில் யதார்த்தத்தை மீறிய புதிய உலகங்கள் உருவாக்கப்படுவதை நாம் காணலாம் (world-building). இந்த அம்சத்தில் இவை புராணன்க்கதைகள், உருவகக்கதைகள், ஃபாண்ட்ஸி கதைகளை ஒட்டி வருகின்றன.
  4. ஏதோ ஒரு வகையில் ஒரு ஊகத்தை முன்வைக்கின்றன.

 ஒரு புனைவு வடிவமாக அறிவியல் புனைவின் இடம் என்ன– ஒரு வரலாற்று பார்வை

அறிபுனை என்பது அடிப்படையில் ஒரு புனைவு வடிவு என்பதை நாம் பார்த்தோம். புனைவுபரப்பின் வரலாறில் அறிவியல் புனைக்கதைகளின் இடம் என்ன? அவை எப்போது எழுதத்தொடங்கப்பட்டன? அவற்றின் எல்லைகள் என்ன?

ஆதிகாலம் முதலாகவே மனிதன் தன்னையும் தன்னுடைய சுற்றத்தையும் புரிந்துகொள்ள கதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறான். தன்னால் அறியமுடியாதவற்றை, புரிந்துகொள்ள முடியாதவற்றை விவரிக்க புனைவை நாடுகிறான். புனைவின் நெகிழ்வில் நிகழ்தர்க்கத்துள் சிக்காத உண்மைகள் கனவாக கவித்துவமாக புரியக்கிடைக்கின்றன. ஆரம்பகாலத்தில் மனிதர்களின் புனைவுகள் புராணங்களாக, கட்டுக்கதைகளாக, தேவதைக்கதைகளாக, உருவகக்கதைகளாக, நாடகங்களாக, மிகைத்தருணங்கள் கொண்டவையாக இருந்தன. அவை யதார்த்தத்தை மீறியே இருந்தன.

நவீன காலகட்டத்தில் தான் யதார்த்தவாத புனைவுக்கான தேவை உருவானது. கூட்டுச்சமூகத்தில் மனிதனின் இடம், நவீனச்சமூகத்தின் அழுத்தம், சமூகத்தில் அவன் அன்னியமாதல் போன்றவற்றை பேச இந்த வடிவம் தேவைப்பட்டது. நவீன உலகம் மனிதனை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் அயர்ச்சிக்கும் உள்ளாக்கியபடியே இருந்தது. இதை சொல்ல ‘முனையில் திருப்பம்’ வைத்த சிறுகதை என்ற வடிவம் உருவானது. மொத்த வாழ்க்கைப்பரப்பின் விரிவையும் பொருளையும் பொருளின்மையையும் சொல்ல நாவல் என்ற வடிவம் உருவானது.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை பெரும்பாலும் யதார்த்தவாத சிறுகதைகளும் நாவல்களும் தான். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு இழையாக மிகையதார்த்த கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கொல்ட்ரிட்ஜ், வில்லியம் பிளேக் முதலிய கவிஞர்களின் உலகப்பார்வை வழியாக உருவான படைப்புலகம் ஒன்று அமைந்தது. வாஷிங்டன் இர்விங், எட்கர் ஆலன் போ முதல் ஹெர்மன் மெல்வில் வரை மிகைப்புனைவு வடிவங்களை வெவ்வேறு வகைகளில் கையாண்டவர்களே. இன்றைய அறிவியல் புனைகதைகளை ஒரு விதத்தில் இந்த மரபின் நீட்சியாக பார்க்கலாம்.

உலகத்தின் முதல் அறிவியல் புனைகதை என்று கருதப்படும் மேரி ஷெல்லியின் ‘ஃபிராங்கின்ஸ்டை’னே அடிப்படையில் ஒரு பேய்க்கதையின் வடிவை கொண்டது. 1820களில் எழுதப்பட்ட இந்தக்கதையில் ஃபிராங்கின்ஸ்டைன் என்ற அறிவியலாளர் தன்னுடைய விஞ்ஞான சோதனைகள் வழியாக ஒரு பேயுருவை உருவாக்குகிறார். குழந்தை போன்ற தன்னுடைய ஆக்கத்தை தானே அழிப்பதா என்று விசனப்படுகிறார். பின்னாளில் எழுதப்பட்ட அனேக அறிபுனை வடிவங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்தக்கதை முன்னோடி. இந்தக்கதையில் அறிவியலின் கட்டற்ற வளர்ச்சிக்கு எதிரான ஒரு மனநிலையை காணமுடிகிறது. இத்தனைக்கும் இந்தக்கதை எழுதப்பட்ட காலத்துக்கு பின் தான் நவீனகாலகட்டத்தின் மிகமுக்கியமான அறிவியல் கருதுகோள்களான பரிணாம வளர்ச்சி, மின்காந்தவியல், மரபணுவியல் முதலியவை கண்டுகொள்ளப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில், காலனிய காலகட்டத்தில், தொழிற்நுட்ப வளர்ச்சிகள் உருவாகிக்கொண்டிருந்தன. உலகம் சுருங்கிக்கொண்டிருந்தது. அப்போது எழுதப்பட்ட அறிவியல் சார்ந்த புனைகதைகளெல்லாம் பெரும்பாலும் சாகஸக்கதைகள். புவியின் எல்லைகளை அறிய முயற்சிசெய்துகொண்டே இருந்தன. எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன் இவ்வகை புனைவுகளை எழுதியிருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தைத்தொடர்ந்தும் அறிவியல் புனைகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டன. நவீன யுகம் உருவாகி வந்துகொண்டிருந்தது. எதிர்கால கனவுகள், கற்பனைகள், அறிவியல் மீதான நம்பிக்கை சார்ந்து நிறைய கதைகள் எழுதப்பட்டன.

இறுக்கமான அறிபுனைவும் நெகிழ்வான அறிபுனைவும்

அமெரிக்காவில் ‘அறிபுனையின் பொற்காலம்’ என்று கருதப்படும் காலகட்டம் இரண்டு உலகப்போர்களுக்கு பின்வந்த ஆண்டுகள் என்று முன்பு பார்த்தோம். இரண்டு பெரும்போர்கள் முடிந்திருந்தன. இரண்டுமே தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியால், பேரழிவை உருவாக்கி நிகழ்ந்துமுடிந்திருந்த போர்கள். போர் பதற்றம் அடங்காத காலகட்டம். பனிப்போரினால் அச்சுருத்தல் இருந்தது. ஆகவே அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் புதுயுக நாயகர்களாக வழிபடபட்டார்கள்.

1950கள்-60களில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு இந்த காலகட்டத்தின் நம்பிக்கைகள் ஐயங்கள மொத்தத்தையும் தன்னுள் உள்வாங்கி கொண்டுள்ளதை காணலாம். அறிவியல்மீது பெருத்த நம்பிக்கை இருந்த காலம். இந்த காலகட்டத்தில் வல்லமையே அறம் என்ற நம்பிக்கை இருந்தது. அறிபுனை கதைகளும் தனிமனிதனை பிரதான படுத்தியபடி எழுதப்பட்டன. நவீனத்துவ கூறுகள் கொண்டிருந்தன.

அறிபுனைகதைகளும் அறிவியலை நேரடியாக அணுகின. விரிவான வகையில் அறிவியல் கருதுகொள்களை, சோதனைகளை, ஊகங்களை முன்வைத்தன. இக்கதைகளில் அறிவியல் நம்பகத்தன்மை என்பது ஒரு விமர்சனப்புள்ளியாகவே கொள்ளப்பட்டது. முக்கியமாக, இவை அறிவியல் சார்ந்து ஒரு ஊகத்தை முன்வைத்தன. இந்த காலகட்டத்து அறிவியல் கதைகள் genre fiction என்ற வகையில் சில குறிப்பிட்ட இதழ்களில் மட்டுமே பிரசுரம் கண்டன. எழுதியவர்கள் பெரும்பாலும் தொழில்முறை பொறியாளர்கள், அல்லது தொழில்நுட்பபின்னணி கொண்டவர்கள். பெரும்பாலும் ஆண்கள். சிறுபிள்ளையின் சாகஸ மனநிலையை கொண்டவர்கள். வாசகர்களும் இக்கதைகளை அறிவியல்ரீதியாக விமர்சிக்கும் பார்வையுடைய, சாகஸக்கதைகளை விரும்பி வாசிக்கக்கூடிய ஒரு சிறுவட்டத்தினர். ஐசக் அஸிமோவின் ‘எவிடென்ஸ்’ என்ற கதை இந்த வகைமைக்கு ஒரு சிறந்த மாதிரி. இன்று இதனை ‘இறுக்கமான அறிபுனை’ (Hard Science Fiction) என்ற பதத்தால் அழைக்கிறார்கள்.

1960கள்-70களில் அமெரிக்காவில் பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. வியட்னாம் போருக்குப்பின் போர் மீதான் கசப்பு உருவானது. சமாதானத்துக்கான விழைவு ஏற்பட்டது. அதிகார அமைப்புகள் மீதான நிராசை உருவாகத்தொடங்கியது. பெண்ணியம், சூழியல் போன்ற மாற்று உலகப்பார்வைகள் உருவாகிவரத்தொடங்கின. வரலாறை ஒரு கட்டமைப்பு என்றும் அதிகாரம் என்றும் பார்க்கும் பின்நவீனத்துவ பார்வை உருவாகியது. கருணையே அறம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அறிவியல் அதிகாரம் மீது ஏற்பட்ட ஐயமும் சமூகநலப்பார்வையும் அறிவியல் புனைகதைகளில் வெளிப்பட்டது.

இக்கதைகள் பொதுவாக அறிவியலின் ஒரு கூறை மட்டும் கதைக்களத்தை உருவாக்க எடுத்துக்கொண்டது. அறிவியல் புனைவென்றாலும் அவை முன்வைத்த கேள்விகளும் ஊகங்களும் மானுடமும் சமூகமும் சார்ந்தவை. இக்கதைகள் பொதுவான வாசகர் பரப்பை நோக்கி எழுதப்பட்டது. எழுதியவர்களில் நிறைய பெண்கள் இடம்பெறத்தொடங்கினார்கள். அறிவியலை நெகிழ்வுபடுத்தி ஒரு கதைகட்டுமான உக்தியாக மட்டுமே கதைப்பரப்பில் பயன்படுத்திய இவ்வகை புனைவுகளை ‘நெகிழ்வான அறிபுனை’ (Soft Science Fiction) என்ற பதத்தால் அழைத்தார்கள். அர்சுலா ல குவினின் ‘Solitude’ என்ற கதை இந்த வகைமைக்கு நல்ல உதாரணம்.

 ஊகப்புனைவு – அறிபுனையின் நெகிழ்வுத்தன்மை 

இன்று எழுதப்படும் அறிவியல் சார் புனைவுகள் அறிவியலை கதைக்குள் வெவ்வேறு நெகிழ்ச்சிநிலைகளில் கையாள்கிறன. ஆனால் அவற்றுக்கு பொதுவான கூறு அவை அனைத்துமே கதைக்குள் ஏதோ விதத்தில் ஓர் ஊகத்தை முனவைக்கின்றன என்பதாகும். அது அறிவியல் சார்ந்து இருக்கலாம், மானுடத்தை சார்ந்து இருக்கலாம், சமூகத்தை சார்ந்தும் இருக்கலாம்.

இன்று எழுதப்படும் இவ்வகை புனைவுகள் பலவற்றில் அறிவியல் கூறே இருப்பதில்லை. அல்லது ஒரு புதுவுலகை சமைத்து நம்பவைக்கும் அளவுக்கு மட்டுமே கதைக்குள் அறிவியல் இருக்கிறது.  ஆனால் அவை மனிதனை பற்றி, மானுட மனத்தை பற்றி ஓர் ஊகத்தை முன்வைக்கின்றன். இவை பெரும்பாலும் மிகைப்புனைவம்சங்கள் கொண்டுள்ளன. ஆகவே இவற்றை ‘ஊகம் ஒன்றை முன்வைக்கும் மிகைப்புனைவு’ என்கிறார்கள் (Speculative fantasy). இறுக்கமான அறிபுனைவு, நெகிழ்வான அறிபுனைவு, மிகை ஊகப்புனைவு என்ற மூன்று வடிவங்களையும் மொத்தமாக ‘ஊகப்புனைவு’ என்ற குடைக்கடியில் இன்று பேசப்படுகின்றன.

ஆக இன்று அறிவியல் புனைகதைகள் கொண்டுள்ள மாற்றத்தை ஒரு எளிமையான சட்டகம் மூலமாக புரிந்துகொள்ளலாம். கதையின் அறிவியல் நம்கத்தன்மையின் அடிப்படையில் அவை மையத்திலிருந்து விரிந்துசெல்கின்றன. இறுக்கமான அறிபுனை, நெகிழ்வான அறிபுனை, மிகை-ஊகப்புனை என்று வட்டங்களை உருவாக்கலாம். இவை அனைத்தையும் ‘ஊகப்புனைவு’ என்று கொள்ளலாம். மிகைப்புனைவு, மாய-யதார்த்தவாதம் போன்ற வகைகள் இவற்றுக்கு மிக நெருங்கியவை, ஆனால் இவற்றில் அறிவியல் அம்சம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக இருப்பதுமில்லை. இன்று பரவலாக எழுதப்படும் dystopian fantasy கதைகள் இந்த வகைமையை சேர்ந்தவை. உதாரணம், இந்த ஊட்டி அரங்கிலேயே கமலக்கண்ணன் அவர்கள் விவாதத்துக்கு எடுத்த ‘சிவப்புநூலிழை’ என்ற கதை. இந்த வகைமைகள் அப்படியே விரித்தபடி சென்றால் பழைய கதைசொல்லல் முறைகளான புராணங்கள், பேய்க்கதைகள், உருவகக்கதைகள், தேவதைக்கதைகள் போன்ற வடிவங்களில் சென்று சேரும். ஆக அறிவியல் புனைவு ஒரு புனைவு வடிவமாக யதார்த்தவாத எழுத்தோடு கொண்டுள்ள உறவை விட பழையபாணி கதைசொல்லல் முறைகளுடனேயே இன்னும் நெருக்கமான உறவு கொண்டுள்ளது.

இன்றைய அறிபுனைத் திரைப்படங்கள் பலவும் இந்த கதைச்சட்டகத்தினுள் பொருந்துபவையே. ‘இண்டர்ஸ்டெல்லார்’ இறுக்கமான அறிபுனைக்கான உதாரணம். அறிவியல் நம்பகத்தன்மை கொண்ட அறிபுனைக் கதை. அசலான அறிவியல் ஊகம் ஒன்றை முன்வைக்கிறது. ஆனால் ‘கிராவிட்டி’ நெகிழ்வான அறிபுனை. அதன் அமைப்பு அடிப்படையில் ஒரு நவீன தேவதைக்கதையுடையது. கதாநாயகியின் மன அழுத்தத்தையும் மீட்சியையும் கவித்துவமாக சொல்வது. அதற்கு அறிவியல் உலகை ஒரு யுக்தியாக பயன்படுத்திக்கொள்கிறது. அக்கதையில் அண்டவெளி, அதன் எல்லையின்மை, கருமை, அழுத்தம் எல்லாமே குறியீடுகளாக இடம்பெருகின்றன. ‘இன்செப்ஷன்’ ஒரு சுவாரஸ்யமான ஊகத்தை முன்வைக்கிறது. ஆனால் கதைக்குள் அதற்கு எந்தவித அறிவியல் முகாந்திரத்தை அளிக்கவில்லை. ஒருவாரான ‘அறிவியல்தன்மை’யோடு கதை அமைக்கப்பட்டுள்ளது, அதுவே அதன் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. அதனை ‘மிகை ஊகப்புனைவு’ என்று வகைப்படுத்தலாம்.

அறிபுனை இன்று

இன்று எழுதப்படும் அறிபுனை கதைகளில் உள்ள நெகிழ்ச்சி ஒருவகையில் இந்த எல்லைகளை கடந்து தூய கதைகளாக நிற்க முற்படுவதன் வழியாக உருவாகி வருகிறது. இன்று எழுதப்படும் அறிவியல் கதைகளின் மிகச்சிறந்த சாத்தியங்கள் மூன்று வகைகளில் வெளிப்படுகின்றன.

  1. கவித்துவம் – இன்றைய அறிவியல் கதைகள் அறிவியலை வலுவான கவித்துவ படிமங்களாக உருவகித்துக்கொள்கின்றன. கதைக்குள் அறிவியல் சோதனையை, அல்லது கோட்பாடை, குறுந்தகவல்களின் தொகையாக இயற்கைவாத பாணியில் முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு சிறு தகவலும் வேறொன்றை சுட்டுவதால் அது கவித்துவமாகிறது. இடைவெளிகளை உருவாக்குகிறது. அதன் வழியே தத்துவார்தமான விசாரங்களை கதைத்தளத்துக்குள் நிகழ்த்தப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. செவ்வியல் ஆக்கங்களாக நிற்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது. டெட் சியாங்கின் ‘Exhalation’ என்ற கதை இந்தப்பாணிக்கதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
  2. வகைமைகலப்பு – இப்போது எழுதப்படும் அறிவியல் கதைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தன்னை நிறுத்திக்கொளவதில்லை. இன்று அறிவியல் கதை சொல்ல முற்படுவது அறிவியலை அல்ல, அறிவியலை ஒரு யுக்தியாகக்கொண்டு மொத்த மானுடக்கதையை. ஆகவே இன்று ஒரு அறிவியல் கதைக்குள் யதார்த்தவாதம் வரலாம். மிகைபுனைவு வரலாம். மாய யதார்த்தவாதம் வரலாம். சர்ரியலிசம் வரலாம். வரலாறு வரலாம். புராணமும் வரலாம். டெட் சியாங்கின் ‘Story of your Life’ கதை இந்த பாணிக்கான ஒரு நல்ல உதாரணம். ஒரு யதார்த்தவாத கதையையும் ஒரு கவித்துவமான அறிபுனை கதையையும் ஒன்றோடொன்று ஊடுபாவும் வடிவம் கொண்டது. ஒரு விதத்தில் இவற்றை ‘அறிவியல் கதைகள்’ என்பதை விட ஒரு புதிய புனைவு சாத்திய வடிவம் என்றே நாம் பார்க்கத்தொடங்கலாம்.
  3. பிரபஞ்ச வரலாற்று நோக்கு – புனைவில் என்றுமே உள்ள ஒரு சவால் அதற்குள் வரலாற்றை எப்படி எழுதுவது என்பதுதான். ஆனால் இன்றுவரை புனைவுகள் கையாண்ட வரலாறு எழுதப்பட்ட வரலாறு. அகழ்வாராய்ச்சி, மொழியியல், சமூகவியல் போன்ற துறைகளிலிருந்து அதற்கான தரவுகளை பெற்றுக்கொள்கிறது. இன்னும் புனைவுப்பரப்பில் உயிரியல் வரலாறும் பிரபஞ்சவியல் வரலாறும் (biological history, cosmological history) எழுதப்படவில்லை. புனைவுக்குள் அறிவியல் தரிசனத்தளத்திலாவது வராமல் இவை எழுதப்படமுடியாது. இந்த உக்தியைக்கொண்டு டெரென்ஸ் மாலிக்கின் ட்ரீ ஆஃப் லைஃப் திரைப்படத்தில் வருவதுபோல் ஒரு யதார்த்தவாத நிகழ்வுக்கு பிரபஞ்சவியலில் காரணத்தை தேடலாம். அல்லது புனைவின் வழியாக ஒரு வரலாற்றுநிகழ்வுக்கு பின்னணியாக உள்ள மரபணுவியல் காரணங்கள் பரிசோதிக்கப்படலாம். மைட்டோகான்றியல் டி.என்.ஏ தரவுகளைச்சார்ந்து நம்முடைய குரங்கின முன்னோர்கள் வரை ஒரு வரலாற்றை புனைவுக்குள் எழுதிப்பார்க்கலாம். 

இவ்வாறு பல தளங்களில் பறந்து விரிந்து பேச எத்தனிக்கும் எழுத்துக்கள் அதுக்கான பிரத்யேக வடிவங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய சவால் இன்றுள்ளது. செவ்வியல் சிறுகதையின் வடிவம் இவற்றைச்சொல்ல போதாது. ஆகவே இந்த கூரல்முறைகள் வழியாக சிறுகதை இலக்கணமும் மாறுபாடு காணலாம். இன்றைய அறிபுனை எழுத்து அதை நோக்கிய ஒரு நகர்வென்று நினைக்கிறேன்.

இவ்வகை எழுத்துக்கள் கலைக்களஞ்சியங்களைப்போல இருக்கும். பழைய புராணகாவியங்களைப்போல் கிளைக்கதைகளும் ஊடுபாவுகளும் புனர்ஜன்மக்கதைகளும் மறுஜன்மக்கதைகளும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டிருக்கும். காலத்திலும் நிலத்திலும் வெளியிலும் தாவிச்செல்லும். நவீன அறிவியலையும் தத்துவத்தையும் தடையின்றி பேசும். நவீன செவ்வியலாகவும் நவீன புராணமாகவும் நிற்கும். இதைநோக்கியே இன்றைய அறிபுனை நகர்வுகொண்டுள்ளது.

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

(சொல்வனம் – 200: எழுத்தாளர் அம்பை சிறப்பிதழில் பிரசுரமான கட்டுரை. நன்றி: சொல்வனம்)

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

ஒரு மரத்தைத் தவிர. அந்த மரத்துக்கு மட்டும் வெறும் பாய்மரமாக நிற்பதில் விருப்பமில்லை. அதற்கு மட்டும், ஏதாவது அதிஉன்னதமான செயலை செய்யவேண்டும், இப்புவியின் உச்சசாத்தியம் ஒன்றின் பொருட்டு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. மரம் வெட்ட வருபவர்கள் தாங்கள் அன்று வெட்டத் தேர்ந்தெடுத்த மரங்களை மரத்தின் உடலில் சுண்ணத்தால் குறிப்பார்கள். இந்த மரம் மட்டும் தன் மீது குறி விழுந்தால் தன்னுடைய நண்பர்களான அணிலையும் குருவியையும் அழைத்து அவற்றின் வாலாலும் இறகாலும் அக்குறியைத் தந்திரமாக அழித்துக்கொண்டது. தன்னுடைய விதி நிறைவேறுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தது.

ஒரு நாள் வேறொரு குழு வந்தது. அவர்கள் மரங்களை வெட்டி ‘பேப்பர்’ தயாரிப்புக்கு விற்கப்போவதாக பேசிக்கொண்டார்கள். அந்த மரத்துக்கு ஒரே குறுகுறுப்பு. ‘பேப்பர்’ என்றால் என்ன என்று தன்னுடைய நண்பர்களிடம் விசாரித்தது.

குருவி சொன்னது. மானுடர் சிந்தனைகளையும் கற்பனைகளையும் உருவாக்குகிறார்கள். அதுவே அவர்களின் ஆற்றலின் உச்சம். அவற்றை மற்றவர்களுக்குக் கடத்த அவற்றை காகிதத்தாளில் பொறித்து வைத்துக்கொள்கிறார்கள். அந்தக்காகிதத்தை வாசிப்பவர்கள் அறிவுபெறுவார்கள். ஆகவே காகிதம் மானுட உன்னதங்களின் ஊர்த்தி, என்றது.

இச்சொற்களை கேட்டு மரம் உவகை கொண்டது. நானும் காகிகதமாகிறேன், என்னையும் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள், வாருங்கள், என்று கிளை விரித்து மரம்வெட்டிகளை அழைத்தது.

அவர்களும் வந்து அந்த மரத்தை வெட்டிக் கொண்டுசென்றார்கள். அதனை துண்டுகளாக்கி அறைத்து கூழாக்கி காகிதமாக்கினார்கள். நீளமான உருளைக் கட்டாக கப்பல் வயிற்றில் அடைத்தார்கள். காகிதமான மரம் தூரதூர தேசங்களுக்குப் பயணித்தது. கப்பலின் ஆட்டத்தில் அதற்கு குமட்டி எடுத்தது. இருந்தாலும் தன் விதியை நோக்கிச் செல்கிறோம் என்ற உற்சாகம் மனதுக்குள்ளே இருந்ததால் அந்த அசௌகரியத்தைப் பொறுத்துக்கொண்டது. நீண்ட நெடிய பயணத்தை அந்த நம்பிக்கையில் மட்டுமே கடந்தது. மெலிந்து சோர்ந்து கரைசேர்ந்தது. வந்த அலுப்பில் மூர்ச்சையடைந்தது. விழித்துப்பார்த்தால் தான் தட்டையாக்கப்பட்டு தன் உடலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டது. ஆகா, நான் பெரிய ஒன்றின் பங்காகிவிட்டேன் என்று மரத்துக்கு ஒரே குதூகலம்.

ஆனால் மரம் புத்தகமாகியிருக்கவில்லை. அது நாளிதழாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆடம்பர விளம்பரங்களும், மனிதர்களின் ஆணவச்செயல்பாடுகளுக்கான பரப்புரைகளும், சாரமற்ற பிரச்சாரங்களும் அதன் உடலில் எழுத்தாகக் குவிந்திருந்தன. அதனை கையிலெடுத்தவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் புரட்டாமல் குப்பையென்று அப்பாலே அதனை தூரப்போட்டார். ஏதோ பலகாரத்தை அதில் சுற்றி இன்னொருவர் விற்றார். பலகாரத்தை வாங்கிச் சாப்பிட்டவர் எண்ணைக்கசிந்த காகிதத்தை கசக்கி எறிந்தார். அப்படியாக முடிந்துபோனது, மரத்தின் உன்னதத்துக்கான கனவு.

இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. இச்சிறுகதையை கண்டடைந்த எழுத்தாளர் திலீப் குமாரும் மொழிபெயர்ப்பாளர் சுபஶ்ரீ கிருஷ்ணசாமியும் இதனை ‘The Tamil Story’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். இக்கதையை பற்றிய மேற்சொன்ன குறிப்புகளும் இந்த நூல் வழியே கிடைத்தவை. அம்மணி அம்மாளைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகிறார்கள.

இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.

மானுட உன்னதத்திற்கான ஊடகமாவேன் என்று கனவுகாணும் மரத்தின் கதை எந்த யுகத்திலும் எழுத்தாளரின் சங்கல்பமே ஆகும். அந்த யுகத்தில் இந்தியா முழுவதும் எழுதத்தொடங்கிய பல எழுத்தாளர்களுக்கு  இந்தக் கனவு ஏதோ ஒரு வகையில் இருந்துள்ளது. பாரதியிலும் தாகூரிலும் புதுமைப்பித்தனிலும் இக்கனவையே காண்கிறோம். பழைய அநீதிகளை, சோர்வுகளை, ஆசார இறுக்கங்களை வேரோடு களைந்து எறிந்து, புது யுகத்தை, புதிய மதிப்பீடுகளை, புதிய சமூகமொன்றை உருவாக்கும் வேகம் அவர்களின் எழுத்துகளில் இருந்தது. தனித்தன்மையான நவீன மொழியில் பற்பல கற்பனை சாத்தியங்களைக் கையாண்டு இக்கனவுகளை எழுத்தின் வழியே நிகழ்த்தினார்கள்.

இதே இலட்சியவாதம் இந்தியாவின் ஆரம்பகட்ட பெண் எழுத்தாளர்களையும் கனவாக ஆட்கொண்டது என்பதை நாம் காண்கிறோம். சுவர்ணகுமாரி தேவி, ஆஷாபூர்ணா தேவி (வங்கம்), நஸர் சஜ்ஜத் ஹைதர் (உருது), சுபத்ரா குமாரி சௌகான் (இந்தி) என்று நீளும் ஒரு பட்டியலில் அனைவருமே சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றியும், சமூகத்தில் பெண்களின் இடத்தைப் பற்றியும் எழுதியதை வாசிக்கலாம். இவை மாறிவந்த நவீன காலகட்டத்தின் விழுமியங்களுக்குள் பெண்களின் இடத்தை வகுக்க முயற்சித்த எழுத்தாக அமைந்தன.

நவீன காலகட்டத்தில் நிகழ்ந்த மதச் சீர்திருத்தங்களும், சாதியத் தளர்வுகளும், நகர்சார் வாழ்க்கை முறையின் எழுச்சியும், சாமானிய மனிதருக்குள்ளும் பரவலாகிக்கொண்டிருந்த படிப்பும், எழுத்தறிவும் பெண்களின் சமூக இடத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிர்பந்தத்தை சமூகத்துக்கு அளித்தன.  பனிப்பாறை உடைவது போல சமூகத்தில் பெண்களின் இடம் மெல்லப் பெயர்ந்து உருமாறியது. பெரும் புரட்டல்களை விட, வீட்டுக்கு வீடு நடந்த சின்னச்சின்ன புரட்சிகள் வழியாக இது நடந்தது என்று அக்காலத்து புனைவுச்சித்திரங்கள் வழியே அறிகிறோம். இக்காலகட்டத்தில் காந்தி முதல் பாரதி வரை, ஆண்கள் மீண்டும் மீண்டும் பெண்களின் இடம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். முதலில் எழும் ஒவ்வாமையையும், மனத்தடையையும் மீறி அறநோக்குடனே செயல்படுகிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய அறிவொளி இயக்கத்தின் அலை நம் கரைகளை வந்து சேர்ந்த தருணம் அது.

நவீன காலகட்டத்தில் பெண்ணின் இடம் என்ன என்ற கேள்வி எழத்தொடங்கியதுமே பெண் ‘நான் யார்’ என்று கேட்க தொடங்கிவிட்டாள். அது காலத்தின் நிர்பந்தம். ஆண்களுக்கும் இந்தக் கேள்வி இருந்தது. சமூகக்கட்டுகளில் இனக்குழுக்களில் ஊர்களிலிருந்து தேனீக்களைப்போல் பறந்து வெளியுலகம் நோக்கி வந்துகொண்டிருந்தவர்களுக்கு சாதி-இன-மத-பூகோள அடையாளங்களை மீறி தங்களுடைய அடையாளத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஆனால் பெண்களுக்கு அந்தத் தேவை இன்னும் உக்கிரமான ஒன்று, அது தன்னுடைய சமூக இடம் என்ன என்றல்லாமல், தன்னுடைய மானுட இடம் என்ன என்ற கேள்வியைச் சார்ந்தது. பெண்ணின் அடையாளம் அதுவரை அவளுடைய உறவுகளை குடும்பத்தை சார்ந்தே இருந்தது. அவளுடைய சுயவிருப்பு என்று ஒன்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எழுத்து எப்போதுமே தீவிரமான சுயவிருப்பின் பிரகடனம். பெண் எழுத்தாளர்கள் ஆரம்பம் முதலே தங்கள் இடம், சுயம், சுயவிருப்பு, கனவுகள் சார்ந்த தேடலை நிகழ்த்தினார்கள்.

அதே நேரத்தில் அக்கனவுகளில் எப்போதுமே சுய சமூகப் பொறுப்பும் ஒரு அங்கம் வகித்தது. அம்மணி அம்மாளின் கதையில் வரும் மரத்தைப்போலவே மானுடப் போக்கின் மையச்சாலையில் சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார்கள். படிப்பறிவு பெற, பொதுவெளியில் பங்குகொள்ள, முடிவுகளை எடுக்க, தங்களின் சுயத் தேடலை நிகழ்த்திக் கொள்ள. இலட்சிய வாழ்க்கை வாழ விருப்பப்பட்டார்கள். தமிழின் ஆரம்ப கால பெண் எழுத்தாளர்கள் பலரும் காந்தியால் தூண்டுதல் பெற்றவர்கள். இன்று, ஒரு இளம் எழுத்தாளராக, அந்த யுகத்தின் இலட்சியவாதமும் கனவும், திரும்பிப்பார்க்கையில் பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. (அதே நேரத்தில், இவர்கள் பலரும் அக்கால கட்டத்தின் மனிதர்களாக, மரபார்ந்தவர்களாக ஆசாரவாதிகளாக இருந்தார்கள் என்பதையும் காண்கிறோம். இரண்டு அம்சங்களுமே அக்காலகட்டத்தின் எழுத்தை பாதித்தன.).

இன்று திரும்ப நோக்குகையில், தமிழ் எழுத்து வெளியில் ‘மானுட உன்னத சாத்தியங்களின் ஊர்தியாவேன்’ என்ற எழுத்தாளரின் இலட்சிய ‘சங்கல்பத்தை’ எந்த அளவுக்கு தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள் கடந்த நூறாண்டுகளில் ‘சம்பவித்திருக்கிறார்கள்’ என்று கேட்கத்தோன்றுகிறது. இந்தக்கேள்வியை ‘தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் இலக்கிய, சமூகப் பங்களிப்பென்ன?’ என்று கேட்பதை விட, ‘பெண்கள் தங்களுடைய அக ஆற்றலையும் படைப்புக்கான சாத்தியத்தையும் சுய கண்டடைதலையும் எந்த அளவுக்கு எழுத்து மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள்? அதற்கான வெளி அமைந்ததா?’ என்று கேட்கத்தோன்றுகிறது. ஒரு இளம் எழுத்தாளராக, இது என் முன்னோடிகளுடன், அவர்களின் கனவுகள், இலட்சியங்கள், தோல்விகள், குறைபாடுகள், நிராசைகள், மேலும் அறச்சீற்றங்களுடன் உரையாடும் பயணமும் கூட.

இந்த பயணத்தில் எனக்கு வழித் துணையாக அமைந்த இரண்டு நூல்களுமே எழுத்தாளர் அம்பையுடையது. அந்த உழைப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். முதல் நூல் 1984-ல் அம்பை சி.எஸ்.லட்சுமி என்ற பெயரில் வெளியிட்ட ‘The Face Behind The Mask’ என்ற ஆங்கில நூல் (விகாஸ் பதிப்பகம்). இரண்டாவது நூல் 2018-ல் வெளியான ‘உடலெனும் வெளி’ என்ற நூல் (கிழக்குப் பதிப்பகம்). இரு நூல்களுமே ஆரம்பக் கட்டம் முதல் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்தை அந்த நூல் எழுதப்பட்ட சமகாலம் வரை தொகுத்தளிக்கின்றன. இரண்டு நூல்களும் சற்றே வெவ்வேறு பார்வைக் கோணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

முகமூடியும், முகமும், கிணற்றுத்தவளைகளும்

1984-ல் வெளியான ‘The Face Behind The Mask’ (முகமூடிக்கு பின்னாலுள்ள முகம்) நூலின் செல்வாக்கு இரண்டு புள்ளிகளால் ஆனது. முதலாவதாக, இந்நூலின் வழியே, அம்பை தமிழ் இலக்கிய வெளியில் அன்று வரை – 1910கள் முதல் 1984 வரை – எழுதிய பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையைத்  தொகுத்து வழங்கினார். தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம், வணிக இலக்கியம் என்ற பிரிவினையில்லாமல், ‘கையில் மைக்கறை படிந்த பெண்கள்’ என்ற அளவிலேயே ஒரு வரலாற்று நிரையை அந்த புத்தகத்தின் மூலம் அளிக்கிறார். இது ஒரு முன்னோடி முயற்சி என்பதால் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, மேலும் முக்கியமாக, அவ்வெழுத்தாளர்களில் பலருடனான சுருக்கமான, ஆனால் முக்கியமான கேள்கவிகள் அடங்கிய நேர்காணல்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார். இவ்வெழுத்தாளர்களை – அவர்களுடைய எழுத்தை மட்டும் அல்லாது அவர்களுடைய பின்னணியை, எழுத்துக்கான சூழலை – இந்த சுருக்கமான நேர்காணல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். தான் எழுதும் விஷயங்களை அவ்வெழுத்தாளர் எவ்வாறு தேர்வுசெய்கிறார், எழுதுவதற்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்கிக்கொள்கிறார், அவர்களுடைய குடும்பச்சூழல் எப்படிப்பட்டது போன்ற கேள்விகள் இடம் பெறுகின்றன.  குடும்பம், காதல், கற்பு, மதம், அரசியல் சார்ந்த இவ்வெழுத்தாளர்களின் கருத்துகளும் அறியக் கிடைக்கின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள், குகப்பிரியை முதல் ஹெப்சிபா ஜேசுதாஸன், கிருத்திகா, சூடாமணி வழியாக சிவசங்கரி, வாஸந்தி வரை ஒரு பெரும் நிரையை வாசிக்கையில், மாறிவந்த சமூக மதிப்பீடுகளின் சித்திரம் இந்த நேர்காணல்கள் வழியே காணக்கிடைக்கிறது. மட்டுமல்லாது, அவர்களின் எழுத்துச் செயல்பாடுக்கு எதிராக குடும்பத்தரப்பிலிருந்து, பத்திரிக்கை ஆசிரியர்களின் தரப்பிலிருந்து, மற்றும் தங்கள் சொந்த அகத்தின் தரப்பிலிருந்து எழுந்த தடைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பார்வைகளின் வழியாக தமிழின் நூறு வருட பெண் எழுத்தை புரிந்துகொள்ள ஒரு சட்டகம் அமைகிறது.

எழுத்தாளர்களின் பதில்களை அம்பை மிகவும் சுவாரஸ்யமாகத் தொகுத்தளித்திருக்கிறார். உதாரணத்துக்கு குகப்பிரியை தன் எழுத்தை பற்றி நேர்காண வரும் அம்பையிடம் கேட்கும் முதல் கேள்வியே ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’ அம்பை இதனைப் பதிவுசெய்யும் விதம் அவருக்கும் அந்த மூத்த தலைமுறை எழுத்தாளருக்குமான அணுக்கத்தையும், இடைவெளிகளையும் காட்சிப்படுத்தும்படி அமைந்துள்ளது. மாமி அப்படித்தான் கேட்பார் என்று இங்கிருந்து நாமும் அம்பையுடன் சேர்ந்து சிரிக்கிறோம். சாதியைப் பற்றி, காதலைப் பற்றி, கற்பைப் பற்றி, பெண்ணின் சுயத்தைப் பற்றி இக்காலத்துப் பெண் எழுத்தாளர்கள் பலர் சம்பிரதாய நோக்குகளையே கொண்டிருக்கிறார்கள். (இவர்களின் இந்நிலைப்பாட்டில் காந்தியின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பது சுவாரஸ்யமான கேள்வி.) புத்தகத்தில் பேசும் பெரும்பாலான எழுத்தாளர்கள் பெண்ணின் சுயம் திருமணம், குடும்பத்துடன் தொடர்புடையது எனக் கருதுகிறார்கள்.

இந்நூலை வாசிக்கையில், ஒவ்வொரு எழுத்தாளரின் ஆளுமையும் எழுந்து வரும்போது, என் ஆன்மாவில், ஆழ்மனத்தில் வாழும் ஒரு பெண்ணைக் கண்டுகொண்ட பரவசம் ஏற்பட்டது. சுயத் தேடலை நிகழ்த்த எழுத வந்தவர்களோ, சமூகச் சீர்திருத்த நோக்குடன் எழுத வந்தவர்களோ, கதை சொல்லி மகிழ்விக்க எழுத வந்தவர்களோ அல்லது மைய வாழ்க்கையிலிருந்து ஒரு வடிகாலுக்காக எழுத வந்தவர்களோ – அனைவரும் எனக்குள்ளும் எங்கேயோ உறைகிறார்கள் என்ற பரவசம் உண்டானது. அதே நேரம் பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுத நினைத்ததை எழுத முடியாமல் போன சூழலையும் பதிவு செய்கிறார்கள். அந்த வலியும் இருந்தது. இந்த உணர்வுகளே இந்த புத்தகத்தை வாசித்ததன் பெறுமதியாக அமைந்தது. புத்தகத்தின் முன்னுரையில் “இவ்வாக்கம் எல்லா பதில்களையும் அளித்துவிடவில்லை, ஆனால் முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்று நம்புகிறேன்,” என்கிறார் எழுத்தாளர் அம்பை. இக்கேள்விகள் மூலம் எழும் சமூக, வரலாற்று பெண் அகச் சித்திரம் தமிழில் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பங்களிப்பு என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் விட, ‘The Face Behind The Mask’-ல் அம்பை எழுப்பும் மையக் கேள்வி, ஆண்கள் அளவுக்கு ஏன் பெண்கள் படைப்பூக்கத்துடன், இலக்கிய நயத்துடன், தனித்துவ நடையுடன், கருத்து வீச்சுடன், சுயத் தேடலுடன் எழுதவில்லை என்பது. “தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்றுமே இலக்கிய வெளிப்பாட்டில் புதிய பாதைகளைத் திறக்கும் இடத்தில் இருந்ததில்லை என்பது வலி மிக்க, ஆனால் அப்பட்டமான உண்மை,” என்று முன்னுரையில், முதல் பக்கத்திலேயே சொல்கிறார். இந்த புத்தகத்தின் நோக்கமே, அது ஏன் என்று கேட்டுத் தெளிவுறத்தான் என்று நினைக்கிறேன்.

அதற்கு பல காரணங்கள் புத்தகத்தின் வழியே துலங்கி வருகின்றன. குடும்பம், பதிப்பகம், சுயக்கட்டுப்பாடு என்று எளிமையாக இப்போதைக்கு வகுத்துக் கொள்ளலாம். ஆனால் இக்காரணங்களை மீறி, அம்பை இந்நூலின் இறுதியில் தொகுத்துரைக்கையில் குறிப்பிடும் முக்கியமான ஒரு அம்சம், பெரும்பாலான பெண்ணெழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய எழுத்தும், அந்த சூழலும் வசதியாக ஒன்றாக அமைந்தன. எழுத்து பணமும், புகழும், கௌரவமும் அளித்தது. உண்மையைத் தேடிச்சென்று எழுதுவதற்கு அவர்களுடைய பாதுகாப்பான கிணறுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்திருக்கலாம். கலாச்சார ரீதியாக ஒத்துப் போய் வாழப் பழக்கப்பட்ட (அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட – “trained capacity to conform” என்கிறார்) பெண்கள் அந்த எல்லையைத் தாண்ட விரும்பாமல், அல்லது முடியாமல், தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். அதனைத் தாண்டி வரும் விருப்புறுதி உருவாவது வரை தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் வட்டமிட்டுக் குறுகி அமர்ந்து ஒரு துண்டு வானத்தை ஏக்கத்துடன் நோக்க்கும் கிணற்றுத் தவளைகளாகவே வாழ வேண்டிய நிலமை நீளும் என்று அம்பை தன்னுடைய நூலை முடிக்கிறார்.

பெண்ணுடலும் பெண்மொழியும்

‘The Face Behind The Mask’ வெளிவந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, 2018-ல் அம்பை இதே தளத்தில் இன்னொரு நூலை எழுதுகிறார். இந்நூலின் பெயர், ‘உடலெனும் வெளி.’ இந்த நூலிலும் ஆரம்பம் தொட்டு தமிழில் எழுதிய பெண்களின் நிரை அளிக்கப்படுகிறது; 80களுக்குப் பின் எழுதவந்த பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் வரிசையும் கூடுதலாக அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த நூலில், தமிழின் பெண்ணெழுத்தை அம்பை முற்றிலும் வேறு கோணத்தில் ஆராய்கிறார். பெண்ணழுத்தை பெண் உடல் ஒடுக்கப்படுவதற்கு எதிரான மொழிவெளிப்பாடாக, கலகக்குரலாக அவர் உருவகிக்கிறார். 1970-80களுக்குப்பின் தமிழில் உருவாகிவந்த பெண்ணியச் சிந்தனைகளின் அடிப்படையில் இதன் சாரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

பொதுமொழியிலும், புராணச் சித்திரிப்புகளிலும், பெண் எப்போதுமே இகழ்வான ஒரு இடத்தில் தான் வைத்துப் பார்க்கப்படுகிறாள் என்று ஆசிரியர் இந்நூலைத் தொடங்குகிறார். பெண்ணுடல் என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றாக, ஆளப்படவேண்டிய ஒன்றாக, பண்பாட்டைக் கட்டிக் காக்கவேண்டிய ஊடகமாக இருக்கிறது. அவ்வுடல் சார்ந்து  பெண்களை பற்றி எல்லா காலத்திலும் சமூகத்தில் பல பிம்பங்கள் நிலவுகின்றன – அன்னை, குடும்பப்பெண், விலைமகள், விதவை, புதுமைப்பெண் என்றெல்லாம். இந்தப் பொதுக் குறியீட்டுப் பிம்பங்களை உதறி, பெண் என்பவள் யார், தான் யார், என்ற சுயப் பரிசோதனை முயற்சியில் 20ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்கள் ஈடுபட்டார்கள். அவர்களது தனிக்குரல் ஓங்கியதன் வழியாக அது சாத்தியமானது.

ஆரம்பக் கட்டப் பெண் எழுத்தாளர்களின் பார்வையில் பெண் கல்வி சார்ந்து, கலப்பு மணம் சார்ந்து, விதவை மணம் சார்ந்து சிந்தனைகள் பேசப்பட்டன.  அடுத்தக் கட்டத்தில் குடும்பத்தைப் பற்றிய புனிதப் பிம்பங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன.  அதே நேரம் கல்வி கற்கும் பெண் பண்பாட்டிலிருந்து வழுவ மாட்டாள் என்ற உறுதிப்பாடும் எழுத்தில் இருக்கவேண்டிய தேவையை இக்காலகட்டத்தின் எழுத்தாளர்கள் உணர்ந்திருந்தார்கள்.

90களுக்குப் பிறகு பெண் கவிஞர்கள் உடல் சார்ந்து, உடலில் மையம் கொண்ட சுயம் சார்ந்து, தங்கள் விருப்புகளைச் சார்ந்து எழுதத்தொடங்கினார்கள். அதற்கான மொழியை உருவாக்கிக்கொண்டார்கள். இதை ஒரு பெரிய நகர்வென ஆசிரியர் கூறுகிறார். கிருஷாங்கினி, அரங்கமல்லிகா, கனிமொழி, மாலதி மைத்ரி, முபீன் சாதிகா, பெருந்தேவி என்று நீளும் இப்பட்டியல் 25க்கும் மேற்பட்ட கவிஞர்களை அவர்களது கவிதைகள், மற்றும் அவற்றின் மொழி வழியாக அணுகுகிறது (2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற இளம் கவிஞர் மனுஷி பாரதி முக்கியமான விடுபடுதல்.) ஆதிக்க மனநிலைகளுக்கு எதிரான கலகக்குரல், தனிமொழி வெளிப்பாடு என்ற வகையில் இவ்வெழுத்துகள் முக்கியமானவை என்கிறார் அம்பை.

ஆனால் பெண் எழுத்து, அது பெண்ணால் எழுதப்பட்டது, பெண்ணுடலிலிருந்து உதித்தது என்பதாலேயே குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றும் சொல்கிறார். ‘பெண்ணெழுத்து’ என்ற பதமே ‘குறைவுடைய எழுத்து’ என்று மறைமுகமாகக் குறிக்கும் நிலை இன்றைய தமிழிலக்கியச் சூழலில் உள்ளது என்கிறார். இது பெண் வெறுப்பில் உதயமாவது. மொழி, அது உருவாக்கும் பிம்பங்கள், பெண் உடல் நோக்கப்படும் விதம், மொழி உடல் மீது செலுத்தும் ஆதிக்கம் இவற்றின் பின்புலத்தில்தான் பெண்கள் உருவாக்கும் மாற்று மொழிகள் புரிந்துகொள்ளப்பட்டு இவ்வெழுத்துக்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்கிறார்.

பெண்ணெழுத்தின் படைப்புக் குறைபாடுகளையும், கிணற்றுத் தவளைத்தன்மையும் ‘The Face Behind The Mask’- ல் சுட்டிக்காட்டிய அம்பை, முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு வெளிவந்த ‘உடலெனும் வெளி’ நூலில் அதைக் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு வேளை, பெண்கள் உடல் பிரக்ஞை கொண்டு அதற்கான மொழிவெளிப்பாட்டை உருவாக்கிக் கொண்டதன் வழியாகவே இன்றைய பெண்ணெழுத்து கிணற்றை விட்டு வெளியே குதித்து விரிந்த நிலத்தில் வானம் நோக்க உலாவத் தொடங்கிவிட்டதென்று  அவர் கருதலாம். ஆனால் இந்த இடம் நூலில் விவாதிக்கப்படவில்லை.

இந்த கட்டத்தில், நான் ஆரம்பத்தில் எழுப்பிக் கொண்ட கேள்விக்குத் திரும்ப வருகிறேன். ‘தமிழ்வெளியில் பெண்கள் தங்களுடைய அக ஆற்றலையும் படைப்புக்கான சாத்தியத்தையும் சுயக் கண்டடைதலையும் எந்த அளவுக்கு எழுத்து மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள்?’ இங்கு படைப்பு சாத்தியம், சுயக் கண்டடைதல் என்று கூற வருவது ஜெயகாந்தன் தன் எழுத்தின் மூலம் என்ன ஆளுமையை வெளிப்படுத்தினாரோ, சு.ரா. தன் எழுத்தின் மூலம் என்ன அறிவதிகாரத்தை நிகழ்த்தினாரோ, அல்லது அம்பை தன்னுடைய எழுத்தின் மூலம் பெண் உலகினைப் பற்றி கற்பனை மூலமும் கோட்பாட்டு ஆய்வு மூலமும் எப்படி ஒரு ஒருங்கிணைந்த சித்திரத்தை முன்வைத்தாரோ, அப்படி. தனக்கென தனி ஆளுமையை, முத்திரையை, கதைப்பிரபஞ்சங்களை, மொழியை, உலகநோக்கை உருவாக்கிக்கொள்ளுதல். அதற்கான உண்மையும் நேர்மையும் சுதந்திரத்தையும் கண்டடைதல்.

இந்த நேர்மையும் சுதந்திரமும் சுயவெளிபாட்டுணர்வும் கூடி எழுதிய பெண் எழுத்தாளர்கள் படைப்பிலக்கியவாதிகள் மற்ற இந்திய மொழிகளில் இருக்கிறார்கள். குரதுலைன் ஹைதர் போல, மகாசுவேதாதேவியைப்போல், இஸ்மத் சுக்தாயைப்போல, மாதவிகுட்டியை போல. உலக மொழிகளில் இருக்கிறார்கள். ஆகவே ஆண்மைய நோக்குடையவர்கள் சொல்வதுபோல் இது அடிப்படை வேறுபாடுகள் சார்ந்த ஒன்று என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் தமிழைப் பொருத்தவரை, ஒற்றைக்கை விரல்களில் எண்ணிவிடக் கூடிய அளவில், படைப்பிலக்கியத்தில் இயங்கிய பெண்ணெழுத்தாளர்களின் அதே பழைய நிரையைத் தாண்டி புதிய சாத்தியங்கள் உருவாகி வரவில்லை என்பது நிதர்சனம்.

படைப்பூக்கமும், கற்பனை வளமும் கொண்டு எழுதுவதில், ஒருங்கிணைந்த சமூகப் பார்வை, வரலாற்றுப் புரிதல், கருத்தியல்சார் அறிவதிகாரம், தனித்தன்மையான இலக்கியப் பிரக்ஞை என்று கட்டமைத்துக்கொண்டு இயங்குவதில், தமிழ் மொழியைப் பொருத்தவரை பெண் எழுத்தாளர்கள் ஏன் பெரிய பங்கு ஆற்றவில்லை? தடைகள் இருந்தனவா? அவை என்ன? இன்று என்னென்ன தடைகள் இருக்கின்றன? எழுத்து சார்ந்த இலட்சியக் கனவுக்கான இன்றைய இடம் என்ன? இவை வெறும் இலட்சியங்கள்தானா, அல்லது இவையும் அதிகாரப் படிநிலைகளுடன் நுண்மையான முறையில் உறவு கொண்டுள்ளனவா? பெண்ணிய மதிப்பீடுகளின் அளவுகோல்களின் படி இது அர்த்தமற்ற கேள்வியாகிவிட்டதா? –  அம்பையின் இவ்விரு நூல்களின் வாசிப்பு வழியாக இக்கேள்விகளை எனக்கே நான் எழுப்பிக்கொள்கிறேன். பதில் தேடுகிறேன்.

சுயமும் படைப்பும்

‘உடலெனும் வெளி’ நூலில் பல பெண்கவிஞர்களின் மொழிவெளிப்பாடாக அவர்களின் கவிதை வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் கண்டுகொண்ட பொது அம்சம், ‘நான்’ என்ற வார்த்தை. இன்று எழுதும் பெண்கள் அனைவருக்கும் தன்னை யார் என்று முதலில் தனக்குத்தானே நிறுவிக் கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக தோன்றுகிறது.

இது இன்றைய அவசியம் மட்டும் அல்ல என்று முன்னரே பார்த்தோம். பெண்கள் நவீன யுகத்தில் எழுதத்தொடங்கிய காலம் தொட்டு தான் யார் என்றும், தன் விருப்பங்கள், சுயம் இவை என்றும் வெவ்வேறு வகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் சுயம் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டதென்று எழுதியிருக்கிறார்கள். மலையாள முன்னோடி எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் புகழ்பெற்ற சிறுகதை ‘பிரதிகாரதேவதா’ நினைவுக்கு வருகிறது. சமூகத்தில், குடும்பத்தில், வேலையிடத்தில், உறவுகளில் தன்னுடைய இடம் என்ன என்ற கேள்வியே இது போன்ற கதைகளில் மிகுதியாக முன்வைக்கப்பட்டது.

பெண்ணெழுத்து என்றாலே பெண் சுயம்/அகம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், பெண்களும் அரசியல், அறிவியல், தத்துவம் என்று புறத்தளங்களை மையமாகக்கொண்ட ஆக்கங்களை படைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் தமிழைப்பொருத்தவரை, புனைவு, கவிதை தளங்களில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு பெரும்பாலும் தங்கள் சுயம் சார்ந்த விசாரிப்புகளிலேயே நிகழ்ந்துள்ளது. பல உலகமொழிகளிலும் இதனை காணலாம். இந்த அம்சத்தை குறையுண்ட எழுத்தாக (நைபாலின் மொழியில் சொல்லவேண்டுமென்றால் feminine tosh-ஆக) நான் பாவிக்கவில்லை. இதற்கு வலுவான சமூக – வரலாற்று, மற்றும் உளவியல் – ஆன்மீக காரணிகள் உள்ளதாக நினைக்கிறேன்.

பெண்ணின் சுயம் சார்ந்த பதற்றத்தையும், அலைக்கழிப்பையும் இரண்டு விதங்களில் அணுகலாம். ஒன்று, இதனை ஒரு வரலாற்றுத் தருணத்தின் பகுதியாக. ஆணுக்கு நவீன யுகம் அளிக்கும் அழுத்தங்களும், அன்னியமாக்கலும் பெண்ணிலும் நிகழ்கின்றன. அவளுடைய மானுட உத்வேகமும், சுயக்கண்டடைதலும் செல்லும் வேகத்துக்கு உலகம் நகர்வதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நவீன யுகத்தின் நுழைவு கிட்டத்தட்ட ஒரு காலப்பெயர்வு. அதன் அதிர்வுகளின் அலைகளே இவை. நூறாண்டுகாலமாக பெண் தன்னுடைய சுயத்தை இலட்சியவாதத்தில், குடும்ப அமைப்பில், மரபில், பிறகு நவீனத்தில், பிறகு தன்னுடைய பெண்மையில், உடலில் என்று படிப்படியாக பிணைத்துக் கண்டடைவது ஒரு இயல்பான வரலாற்று நகர்வு. அந்த முதிர்ச்சியுடனே இந்த எழுத்துக்களின் இடம் மதிப்பிடப்படவேண்டும். இது பெண்ணின் வரலாற்றுச்சுயம், சமூகச்சுயம் சார்ந்தது.

ஆனால் இன்னொரு அம்சமும் உள்ளது. இன்று என்றல்ல, பெண் குரல் (என்று இன்று நாம் நம்புவது) பதிவாகத் தொடங்கிய நாள் தொட்டு ‘நான்’ என்ற தன்னிலைக் குரலும் அதன் பகுதியாகவே ஒலிக்கிறது என்பது சுவாரஸ்யமான ஒன்று. ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள கவிதையான வாக் சூக்தம் தன்னிலையில் மட்டுமே ஒழுகிச்செல்லும் பாடலாக அமையப்பெற்றுள்ளது. மரபாக வாகாம்பிரிணி என்ற பெண் ரிஷி இதனை பாடியதாக சொல்லப்படுகிறது. இந்தப்பாடலில் அந்த ‘நான்’ என்ற குரல் தன்னை பூமியிலிருந்து வானம் வரை நீளும் பேருருவாக உருவகித்துக்கொள்வதை காணலாம். ‘மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்என் பிறப்பிடமோ கடலாழத்தில்,’என்கிறது அக்குரல். நான் விரும்புபவர்களைக் கல்வியும், மேதமையும், ஞானமும் கொண்டவர்களாக ஆக்குவேன் என்கிறது. (‘நானே வானாகி, நானே காற்றாகி’ என்று அடுக்கும் சுகிர்தராணியின் ‘இயற்கையின் பேரூற்று’ என்ற கவிதை வரியை இதனுடன் இணைத்து வாசிக்க இடமுள்ளது. ஆனால் வாக் சூக்தத்தின் முழுமைப் பார்வையும், மெய்மீறல் கணமும் இந்தக் கவிதையின் சாத்தியத்தை மீறுகின்றன என்பது என் கருத்து.) இவ்வுலகுடன் தன்னைப் பிணைக்கும் உடலுக்கும், அதை மீறி எழ ஏங்கும் சித்தத்துக்கும், கனவுக்குமான ஆழ்ந்த மோதலை பெண் தன் உளவியலில் உணரலாம். சுயம் சார்ந்த அலைக்கழிப்பு இந்த புள்ளியிலிருந்து தொடங்கலாம். இந்த அடிப்படை உளவியல் மோதல், சமூக இறுக்கங்களுடன், பொய்யான எளிமைப்படுத்தப்பட்ட பிம்பங்களுடன் இணையும்போது பெரிய அழுத்தமாக உருவாகவும் வாய்ப்புள்ளது. இது பெண்ணின் ஆன்மீகச் சுயம் சார்ந்தது.

சுயத்தைக் கேள்விக்குள்ளாக்குவதில் ஒரு பொறி உள்ளது. நாம் யார் என்று நாம் எப்போது வரையறுக்கிறோமோ, அதனுடன் சேர்த்து நமக்கும்  நாம் அல்லாததுக்குமான  உறவென்ன என்றும் வரையறுத்துக்கொள்கிறோம். மரத்தின் தண்டும் வேரும் சுயமென்றால், காற்றிலாடும் கிளையும், இலையும் அது அதுவல்லாத வெளியுடன் கொள்ளும் உறவு. ஒன்று ஆன்மீகச்சுயம், இன்னொன்று சமூகச்சுயம். இவ்வுலகில் பெண்ணின் இடம் என்ன என்ற கேள்வியை இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றோடொன்று தொடுத்து ஆராய்ந்தபடிதான் பதில் சொல்ல முடியும்.  இவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள, தான் யார் என்ற உண்மையான, நேர்மையான தேடலை நிகழ்த்திக்கொள்ள, கற்பனையும் மனவிரிவும் விளையாட்டுத்தனமும் கூடிய படைப்புவெளி தேவையாகிறது.

படைப்புவெளியில் எல்லா வகையான குத்தும், குடையும் அசௌகரியக் கேள்விகளை எழுப்பிக்கொண்டு விளையாடலாம். ஆன்மீகச் சுயத்துக்கும் சமூகச் சுயத்துக்குமான உறவுகளை, முரண்களை ஆராயலாம். விளையாட்டுத்தனமாக, சிரித்தபடியே இதை செய்யலாம். நேர்மையாக ஆழம் நோக்கி போகலாம். அரசியல்சரிகளை பற்றி, அதிகாரக் கெடுபிடிகளைப் பற்றி கருத்தியல் இறுக்கங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதற்காகவாவது, பெண் தன் சுயத்தைக் கண்டடைந்து தான் யார் என்று உண்மையில் அறிந்து தெளிவுறுவதற்காகவாவது, பெண்ணெழுத்தின் அடுத்த படிநிலை ஆழமான படைப்பெழுத்து நோக்கிய நகர்வாக அமையவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

எங்கும் விரியும் கற்பனையைப்போல், இலட்சிய உலகங்களைக் கனவு கண்டு உருவாக்குவதைப்போல், இன்னொரு கலக சக்தி இல்லை. படைப்பிலக்கியமே தன் கற்பனை மூலம் உலகத்தின் சிந்தனைப்போக்கின் முன்னிலையில் நின்று புதிய சாத்தியங்களைச் சுட்டுகிறது. இன்று நாம் வாழும் உலகத்தைக் கட்டமைத்த விழுமியங்கள் அனைத்துமே பதினெட்டாம் நூற்றாண்டில் வால்டேர் எழுதிய ‘காண்டீட்’டிலிருந்தும் ரூஸோவின் ‘ஹெலொயீ’ஸிலிருந்தும் உருவாகி வந்தவை. இரண்டுமே கதைப்புத்தகங்கள். அதே போல் இந்தியாவில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரின் ஆனந்த மடம் நாவலின் தாக்கத்தையும் சொல்லலாம்.

தவிர, படைப்புச் செயற்பாட்டில் ஈடுபடும்போது ஒரு சாத்தியம் – அது மானுடருக்கே உரித்தானது – நாம் நம்முடைய சிறு வட்டங்களுக்குள்ளிலிருந்து வெளிவந்து எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கலாம். ஜன்னல் துண்டு வானமும் கிணற்று வட்ட வானமும் மிகச்சிறியவை. சுயத்தை அறிய கற்பனை மூலம் சுயத்தை உதறுவதும் ஒரு வழி. அப்போது பல வாழ்க்கைகளை வாழலாம். பல கண்கள் வழியாக உலகத்தைக் காணலாம். பலர் வலிகளை அறியலாம். சுயத்தை விரித்துக்கொள்ளலாம். நாம் நம்மைப் பார்க்கும் விதமும் மாறுபடும்.

மாறாக, பெண்ணியம் உள்ளிட்ட எந்த ஒரு கருத்தியலும் இறுக்கமானது. கருத்தியலை முன்வைத்து எழுதப்படும் புனைவு அடிப்படையில் படைப்பூக்கத்துக்கு எதிரானது. ஒற்றைப்படையான பதில்களை அளிக்கக்கூடியது. ‘நான் இதுதான்’ என்று முதலிலேயே வரையறுத்து நிற்பது. பல நேரங்களில் அந்த ‘நான் யார்’ என்ற கேள்வி நம்மை இட்டுச்செல்லும் இடங்களுக்கு, நம்முள் நாம் ‘உண்மை’ என்று முன்னரே வகுத்துக்கொண்டிருக்கும் கருத்தியல் நம்மைச் செல்ல அனுமதிக்காது.

பெண்ணியத்தின் முக்கிய பங்களிப்பு அது உருவாக்கும் சொற்கட்டுகள் (vocabulary). Gaslighting, domestic violence, mansplaining போன்ற சொற்கள். இவற்றுக்கு சமூக-அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. ஓரளவுக்கு உளவியல் ரீதியான முக்கியத்துவமும் இருக்கிறது. ஆனால் அனுபவத்தளம் என்பது எப்போதுமே சிக்கலானது. இந்த அவலங்கள் உளவியல் தளத்தில் எவ்வாறு உரவாகின்றன என்று புரியாத வரை என்னதான் மேல்பூச்சு போல் அரசியல்சரி பேச்சுகள் மாறினாலும் இது தனிமனித உள்ளத்திலும் சமூக கூட்டுமனத்திலும் மாறாது.

அடுத்து, பெண்ணியம் போன்ற கருத்தியலுக்கு மீவியற்பில் தளம் (metaphysics) கிடையாது. பெண்ணின் சமூக அடையாளம் என்ன என்று அது சொல்லும். பெண் இருப்பு என்றால் என்ன என்று அதனால் சொல்லிவிட முடியாது. ஆக எளிமையான சொற்களுக்குள் கருத்துகளுக்குள் அடைத்துவிடமுடியாத இந்த அனுபவத்தளங்களை தொடவே இலக்கியம் தேவையாகிறது.

தமிழ் எழுத்துப் பரப்பிலேயே (ஓரளவுக்கேனும்) எளிய பிம்பங்களை ஒதுக்கி, ஆழமுள்ள பெண் பாத்திரங்களைப் படைத்த தரப்பு நவீன இலக்கியத்தினுடையது என்று அம்பை தன்னுடைய இரண்டு நூல்களிலும் பதிவு செய்கிறார். வாரப் பத்திரிக்கைகளிலும் (பெண்கள் எழுதிய எழுத்தையும் சேர்த்துத்தான்!), கழகம் சார்ந்த எழுத்துகளிலும் உள்ள பெண் பாத்திர சித்திரிப்பை விட நவீன இலக்கியப் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் காத்திரமானவை என்பது என் வாசிப்பனுபவமாகவும் இருந்துள்ளது. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை உட்பட அம்பையின் சில சிறுகதைகளிலேயே வரும் பெண் அனுபவம் சார்ந்த நுட்பங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு ஒரு கதையில் நகர்ப்புறத்திலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் திருநெல்வேலிக்கு செல்வார். அங்கு எந்த உடற்கூச்சமும் இல்லாமல் பெண்கள் சேர்ந்து குளிப்பது வழக்கமாக இருக்கும். நகர்சார் நவீனப் பெண்ணுக்கு இது முதலில் அசௌகரியத்தை உருவாக்கும். ஆனால் அந்த இயல்புணர்வே பின்பு விடுதலையுணர்வாக, மாற்று வாழ்க்கைநோக்கு கொண்ட மற்றப் பெண்கள் தனக்கு அளித்த பரிசாகக் காணத்தொடங்குவார். அனுபவ நுட்பங்கள் அளவுக்கு, உளவியல் நுட்பங்கள் அம்பையின் எழுத்தில் வருவதில்லை. நான் வாசித்த வரை என் ரசனையின் அடிப்படையில் பெண்ணின் அகத்தை சுயத்தின் இடத்தை தமிழில் ஆழமாக விசாரித்த மூன்று எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் (நாட்டார்பாணி கதைகள், யதார்த்த புனைவுகள் வழியாக), ஜெயகாந்தன் (நகர்ப்புற மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்தவாத புனைவுகள் வழியாக), ஜெயமோகன் (தொன்ம மறுஆக்கங்கள் வழியாக). படைப்பிலக்கியத்துக்கு வெளியே இந்த ஆழம் உருவாகவில்லை. பிம்பங்களாக, அல்லது ஒற்றைப்படையான அனுபவக் குறிப்புகளாக, சுயவெளிப்பாடுகளாக, எதிரீடுகளாக நின்றுவிடுகிறது. இரண்டாம் வகை ஆக்கத்தில் ‘ஆமேன்’ சொல்வதைத் தவிர வாசகப் பங்கேற்புக்கு பெரும்பாலும் இடம் இல்லை.

பெண்ணெழுத்தும் படைப்பெழுத்தும் – முரண்கள், சவால்கள்

The Face Behind The Mask’ நூலின் முன்னுரையில், தான் பெண் எழுத்தாளர்களை பற்றி ஒரு நூல் எழுதப்போவதாக சொன்னபோது, ஒரு மூத்த எழுத்தாளர், “பெண்ணெழுத்தாளரா? அந்தப் பதமே முரணாக உள்ளதே?” என்று நக்கலாகச் சொன்னதாக அம்பை பதிவு செய்கிறார். உலக இலக்கியப் பரப்பில் பெண் எழுத்தை நோக்கிய ஏளனப் பார்வை எப்போதுமே இருந்து வந்துள்ளது. பேரிலக்கியவாதிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்துள்ளார்கள், பெண்களுள் எழுதுபவர்கள் பலரும் படைப்பூக்கத்துடன் எழுதுவதில்லை என்ற தர்க்கப்புள்ளி ஒரு பக்கம் என்றால், ‘பொம்பள பிள்ளைங்க என்னாத்த எழுதீறப்போறாங்க’ என்ற உதாசீன ஆண்மைய நோக்கு அதற்கு மறு எல்லை. இன்று பெண்ணெழுத்துக்கெதிராக முன்வைக்கப்படும் விமர்சங்கள் இவ்விரு எல்லைகளுக்குள் இயங்குபவை. ஒன்று விவாதிக்கப்படலாம், மற்றொன்று வெறும் அபிப்பிராயம். இரண்டாவதை கேள்விக்குட்படுத்திக்கொள்வது அவரவர் மனச்சாட்சி சார்ந்த செயல்பாடு.

தமிழ்ப்பரப்பில் பெண்கள் ஏன் அதிக எண்ணிக்கைகளில் படைப்பிலக்கியம் எழுதவரவில்லை என்ற புறவயமான, மிக முக்கியமான ஒரு கேள்விக்கு ‘The Face Behind The Mask’ நூலில் துலங்கி வரும் சித்திரத்தில் பல வலிமிக்க விடைகள் பொதிந்துள்ளன.

50-60-களில் வார இதழ்களில் எழுதி நட்சத்திரங்களாக விளங்கிய சில பெண் எழுத்தாளர்கள் உண்மையில் தாங்கள் குடும்ப வற்புறுத்தலின் பெயரில் பணத்துக்காக எழுதியதாக இந்நூல் வழியே பதிவுசெய்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரி எழுத்தை எழுத வேண்டும், அக்கதையில் பெண் பாத்திரங்களின் இடம் எப்படி வார்க்கப்பட வேண்டும் என்று குடும்பத்தின் தலையீடு இருக்குமாம். எழுதிக் குவித்து நட்சத்திரங்களாகி சம்பாதித்து அடுக்கிய இவ்வெழுத்தாளர்கள் பலருக்கு எழுத்து சுயத்தேடலுக்கான வெளியாக அமையவில்லை. இக்கெடுபிடிகளை மீறி அவர்கள் சொந்த பிரக்ஞையோடு எழுதியிருக்கவேண்டுமென்றால் குடும்பத்தை முறித்துக் கொண்டு செல்லும் நிலைமை வந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. வேறுவகையில் பொருளாதாரச் சுதந்திரம், அடையாளம் அமையாதவர்களுக்கு இது மிக சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கு மறுபக்கமாக நின்ற பெருநிறுவன வார இதழ்கள், பல வகைகளில் பெண்ணெழுத்தாளர்களின் நேர்மையான வெளிப்பாட்டை ஒடுக்கும் ஆதிக்க நிறுவனங்களாக இருந்தன என்பதையும் வாசிக்கிறோம். அவற்றுக்கு இதழ்களை விற்று இலாபம் ஈட்டவேண்டிய நோக்கம். பெண் எழுத்தாளர்களை ஒரு குறிப்பிட்ட வகை எழுத்தை மட்டுமே  அளிக்கக் கோரின. சற்றே வித்தியாசமான, படைப்பூக்கத்துடன் கூடிய, மரபார்ந்த மதிப்பீடுகளுக்கெதிரான கதைகளை, வாடிக்கையான வாசகர்களை அன்னியப்படுத்திவிடக்கூடாது என்று கூறி நிராகரித்தன. காப்பிடலிசத்தில் முதலாளி வைப்பதுதான் சட்டம், பிடிக்கவில்லையென்றால் எழுதாதே என்று இன்று நாம் ‘நியாயம்’ பேசலாம், ஆனால் தார்மீகமாக எனக்கு அது தவறாகவே படுகிறது. எப்படியும் இது ஒரு அவலநிலை என்பதை சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. பெரிய நிறுவன இதழ்களின் தாக்கம் தமிழ் பெண்ணெழுத்தை போன்சாய் மர அளவுக்கே குறுக்கிவைத்தது என்றால் மிகையல்ல.

ஆனால் மாற்றுத் தரப்பில், இவ்வெழுத்தாளர்கள் விருப்பத்துடன் தான் வார இதழ்களில் எழுதினார்கள் என்பதையும் கவனிக்கிறோம். அந்த காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்களுக்கு வார இதழ் எழுத்து பொருளாதாரச் சுதந்திரத்துக்கான ஒரு வழியாக அமைந்திருக்கலாம். குடும்பப் பெண்ணின் பாதுகாப்பான, மரபார்ந்த மதிப்பீடுகளுக்கும் நின்று “நல்ல பெண்ணாக” எழுதும் வரை சமூகத்தின் கண்களுக்குள் அது கௌரவமான தொழிலாகவும் அமைந்திருக்கலாம். பெயரும் புகழும் கிடைத்தது. ஆகவே அவர்கள் இதனைப் பெரிய யோசனை இல்லாமல் தேர்ந்தெடுத்திருக்கலாம். சற்றே ஆத்மார்த்தமாக எழுதியவர்கள் கலைமகள் போன்ற இதழ்களில் எழுதினார்கள் ஆனால் அவர்களாலும் இந்த மதிப்பீடுகளை மீறி வர முடியவில்லை. எழுத்தின் வழி உண்மையான தேடல்களை நிகழ்த்திக்கொள்ள முடியவில்லை. தங்களையே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு கதையை எழுதமுடியவில்லை.

இன்று யோசித்துப்பார்க்கையில், ஒரு வேளை அப்படியொரு சாத்தியமிருப்பதையே அவர்கள் அறிந்திருக்க வழியில்லாமல் இருந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆண்களுக்கு இளவயதில் இலக்கிய கருத்தியல் அறிமுகமெல்லாம் பெரும்பாலும் சூழல் நட்புகள் மூலமாகவே நிகழ்கிறது. விவாதங்கள் மூலமே இலக்கியம் சார்ந்து கல்வியும் கூர்தீட்டலும் நிகழ்கிறது. எல்லா இலக்கிய இயக்கங்களும், உலகம் முழுவதும், கூட்டுச் செயல்பாடாகவே நிகழ்கின்றன. பெண்களுக்கு, இன்றுவரை கூட, அவ்வளவு விரிவான வெளியுலக நட்புவட்டம் சாத்தியப்படுவதில்லை. இத்தனைக்கும் தமிழில் வார இதழ் நட்சத்திரங்களாக அமைந்த பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள். படித்தவர்கள். அவர்களுக்கே இந்த வாசல்களைக் கண்டடைய, அணுக, நுழைய தடைகள் – அகத்திலோ, புறத்திலோ – இருந்திருக்கின்றன. அப்படியிருக்க மலைச் சமூகப் பெண்களும் கடற்கரைச் சமூகப் பெண்களும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களும், சிறுபான்மையினப் பெண்களும் என்று தங்களுடைய தேடல்களை, கண்டடைதல்களை படைப்பிலக்கியமாக எழுதப்போகிறார்கள்? அவர்களுடைய கட்டற்ற கற்பனைக்கான குரலாக எழுத்துவெளி இங்கு அமைய வேண்டாமா? இந்தக்கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு விரிவான விவாதங்கள் அமைந்து விடைகொள்ளவேண்டிய தருணம் இப்போதாவது நேர்மையாக நிகழவேண்டும்.

உடல்வெளியும் பெண்மொழியும்

90-களுக்குப்பிறகு, பெண் கல்வி தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலான பிறகு, பெண் வாழ்க்கையில் முன்பை விட குடும்பம், கல்வி, சமூகம் சார்ந்து சுதந்திர வெளியை அடைந்துவிட்ட காலத்தில், வாய்ப்புகள் அதிகரித்தபோது, படைப்பூக்கமும் கற்பனை வளமும் கொண்ட பெண்களின் எழுத்து எழுந்து வந்திருக்கலாம். ஆனால் அது நிகழவில்லை.

இதற்கு ஒரு காரணம், 70-கள் தொடங்கி மூன்று தசாண்டுகளுக்கு நிகழ்ந்த பின்னமைப்பியல் சிந்தனையின், மற்றும் இரண்டாம், மூன்றாம் அலை பெண்ணிய சிந்தனையின் தாக்கம் என்று வகுக்கலாம். 1970-ல் வெளிவந்த அவுஸ்திரேலிய எழுத்தாளர் ஜெர்மெயின் க்ரியரின் ‘The Female Eunuch’ என்ற நூல் பெண்களுக்கான பெண்கள் தங்கள் உடலை, பாலியலை அறிந்து கொண்டாடுவதன் தேவையைப் பற்றி பேசியது. அதே ஆண்டு வெளியான கேட் மில்லெட்டின் ‘Sexual Politics’ என்ற நூல், பெண்களின் உடல், பாலியல் இரண்டுமே சமூக-அதிகார அமைப்பால் சுரண்டப்படுகின்றன, ஆகவே அது தனிமனிதப் பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனை என்றது. இந்த நூல் முதன் முதலாக மேற்கத்திய மரபின் ‘கேனன்’ எனப்படும் இலக்கிய ஆக்கங்களின் ரசனை வரிசையைப் பெண்ணிய நோக்கில் விமர்சித்தது. மைய இலக்கியப் போக்கே ஒரு ஆண்மைய ஆதிக்கசக்தி என்ற சிந்தனை பெண்ணிய வட்டங்களில் இந்தப்புள்ளியிலிருந்து உருவாகத்தொடங்கியது.

உடலெழுத்து, பெண்ணெழுத்து என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவை எல்லாமே இங்கிருந்து தொடங்கியவை. உலகம் முழுவதும் எழுந்த அந்த அலை தமிழுக்கு 90கள்-2000-ங்களில் வந்து சேர்ந்தது. பெண்கள் தங்கள் தனித்தன்மைக்கான தேடலை, ஒடுக்குமுறைக்கெதிரான குரலெழுச்சியை, எழுத்தில் தன் உடலை ஆராய்வதன் மூலம் நிகழ்த்திக்கொள்ளலாம் என்ற புரிதலின் அடிப்படையில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவானார்கள். உடலெழுத்து என்ற இந்தப் போக்கு மைய இலக்கியப் போக்குகளுக்கு எதிர்நிலையாகக் கருதப்பட்டது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக, மரபார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராக குரல்கொடுப்பதனாலேயே இவ்வெழுத்து கொண்டாடப்பட வேண்டுமென கூறப்பட்டது. அதே நேரத்தில், இந்த கருத்தியலின் ஜடவாத அடித்தளமும், உடலைத் தாண்டி பெண்ணின் அக முழுமைக்கு எதிரான சமூக அழுத்தங்களும், இந்த விவாதச்சூழலில் அதிகம் பேசப்படவில்லை.

‘உடலெனும் வெளி’ நூலில் அம்பை, பெண்கள் இவ்வகை எழுத்தை நிகழ்த்திக்கொள்ள தனி மொழி அமைப்புகளை கையாள்கிறார்கள் என்கிறார். தங்களுக்கென்று சொந்தமாக தன் உடல் சார்ந்த, தன் உலகம் சார்ந்த மொழியை கட்டமைத்துக்கொள்வதன் வழியாக, பெண்கள் தங்கள் உடலை ஆண்மையச் சமூகப் பார்வைகளிலிருந்து மீட்டெடுக்கிறார்கள் என்கிறார்.

‘பெண்ணெழுத்து’ அல்லது ‘பெண் மொழி’ (Ecriture feminine) என்ற பதம் உளவியலாளர் ழாக் லக்கானின் கருத்துகளிலிருந்து பின்னமைப்பியல்வாத பெண்ணிய சிந்தனையாளர்கள் ஹெலென் சிக்சூ மற்றும் ஜூலியா க்றிஸ்டேவாவால் உருவாக்கப்பட்டது. உலகத்தில் புழங்கும் மொழி ஆண்மைய, அதிகாரக் குறியீட்டுக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும், அதற்கு மாற்றாக, குழந்தைப் பருவத்தில் மொழி உருவாகத் தொடங்கிய காலத்துக்கு முந்தைய மனவெளியிலிருந்து, இன்னொரு மொழியை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் இவர்கள் சொன்னார்கள். இந்த மொழிவெளிப்பாட்டையே அவர்கள் ஆண்மைய பொதுமொழிக்கு எதிரீடாக பெண்மொழி என்று குறிப்பிட்டார்கள். பெண்கள் எழுதும்போது ஆதிக்கசக்தியான பொதுமொழியில் எழுதாமல் இப்படியொரு மாற்றுமொழியை கையாளவேண்டும் என்ற கருத்தை முனவைத்தார்கள். மேலும், இது பெண்களுக்கான மொழி மட்டுமல்ல, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுத விரும்புபவர்களெல்லாமே, ஆணோ பெண்ணொ, இதனை கையாளலாம் என்று கூறப்பட்டது. இந்த வகை ‘பெண்மொழி’க்கு எடுத்துக்காட்டாக அன்றைய விவாதங்களில் வைக்கப்பட்டது ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் வர்ஜீனியா வூல்ஃபின் எழுத்துக்கள். பின்நவீனத்துவ எழுத்துமொழியின் சாத்தியங்களும் இந்த அமைப்பை தொடுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இன்று ‘பெண்ணெழுத்து’, ‘பெண்மொழி’ என்று சொல்லப்படும் பதம் உத்தேசிப்பது இந்த வரையறுக்கப்பட்ட கருத்தை அல்ல. அதன் எல்லைகள் மாறிவிட்டன. பெண்கள் தங்கள் உடல்களை, தனிஉலகத்தை எழுதக் கையாளும் மொழிவெளிப்பாடு அனைத்துமே பெண்மொழி என்று கூறப்படுகிறது. அம்பையும் இந்த அர்தத்திலேயே இப்பதத்தை தன் நூலில் கையாள்கிறார்.

தமிழில் பெண்மொழி வெளிப்பாட்டை ஆராயும் ஆசிரியர் இந்த நூல் வழியாக அளிக்கும் சில உதாரணங்கள் சுவாரஸ்யமானவை – ‘உலைபோல் மனம் கொதித்தது’ என்றும் ‘பால்போல் பொங்கியது’ என்றும் பெண்ணெழுத்தாளர்களே எழுதுவதாக குறிப்பிடுகிறார். கவிதையிலும் இவர் அளிக்கும் எடுத்துக்காட்டுகள் வழியே சில பொதுக்கூறுகள் கிடைக்கப் பெறுகின்றன. ‘நான்’ என்ற நேரடிக்கூற்று, நெளிவுகள், அழகியல் சார்ந்த வர்ணனைகள், நிறங்கள், வானத்துக்கான ஏக்கம் போன்ற கூறுகளை இவ்வாக்கங்களில் அடையாளம் கண்டேன். இக்கூறுகள் என் எழுத்துப்பயிற்சியிலும் இயல்பாகப் பயின்று வருவதை கவனித்திருக்கிறேன்.

அதே நேரம் கவிதை மொழியில் பெண்மொழியில் எழுதப்பட்டதென்ற வகையில், உடலை முன்வைத்து எழுதப்பட்டதென்ற வகையில், பெண்ணெழுத்தாளர்களின் குறிப்பிட்ட சாத்தியக் கண்டடைதல்கள் என்ன, மற்ற கவிஞர்களின் மொழியோடு எங்கு இசைகிறார்கள், எங்கு வேறுபடுகிறார்கள், மையக்கவிதைப் போக்குடன் இக்கவிதைகளின் உறவென்ன போன்ற விமர்சனங்கள் இந்நூலில் முனவைக்கப்படவில்லை. பெண் கவிஞர்களுக்கிடையேயான வேறுபாடுகள், சிறப்புகள் குறித்த விமர்சனப்பார்வையும் இந்த நூலில் இல்லை. ஆசிரியர் பல கவிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்; பெருந்தேவியைத்தவிர என் வாசிப்பில் ஒரு கவிஞரின் குரலுக்கும் இன்னொரு கவிஞரின் குரலுக்கும் மொழிக்கும் என்னால் வேறுபாடு காணமுடியவில்லை. சட்டென்று ஒரு கவிதைவரியை எடுத்தவிழ்த்தால் இது இன்னாருடைய வரி என்று உடனே மனம் கண்டுகொண்டு குதூகலிக்கும் முத்திரை இல்லை. நான் நான் என்ற ஏக்கத்த்தை, தேடலைக்கொண்ட இக்கவிஞர்கள், பெண்மொழி என்ற பொதுபிம்பத்தைத் தரித்துக் கொண்டு, தங்கள் தனிமொழியை சுயத்தை கைவிட்டுவிட்டார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது.

பழைய பிம்பங்கள்; புதிய பிம்பங்கள்

‘The Face Behind The Mask’, ‘உடலெனும் வெளி’, இரண்டு நூல்களிலுமே தமிழ்ச்சமூகம் பெண்கள் மீது கற்புக்கரசி, அன்னை, ஜீன்ஸ் அணிந்த நவீனப்பெண் என்றெல்லாம் சுமத்தும் பிம்பங்களை (persona) பற்றிக் குறிப்பிட்டு அம்பை தொடங்குகிறார். அவை கட்டமைப்புகள் என்றும், பெண்களை குறிப்பிட்ட வகைகளில் ஒழுக மறைமுகமாக ஆணையிடுகின்றன என்றும், அவை பெண்களின் சுயக் கண்டடைதலையும், இயல்பான வெளிப்பாட்டையையும் தடை செய்கின்றன என்று கூறுகிறார். அவை எழுத்தின் மூலம் மொழியின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு களையப்படவேண்டும் என்கிறார்.

ஆனால் இவ்விரண்டு நூல்களை வாசித்து முடித்தபோது எனக்கு தோன்றியது இதுதான். இன்று திரும்ப நோக்குகையில், எந்த பிம்பங்களை முறியடிக்க நூறாண்டுகால தமிழ்ப் பெண் எழுத்து போராடி வருவதாகச் சொல்லப்படுகிறதோ, அதே பெண் எழுத்து பிண்டங்களைப்போல் இரு பிம்பங்களுக்குள் தன்னை கொண்டு சேர்த்துக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது. 1990-களுக்கு முன்னால் ‘குடும்ப எழுத்தாளர்’ என்ற பிம்பம் என்றால் 1990-க்கு பின்னால் ‘பெண்ணியவாதி’ பிம்பம்.

இந்த பிம்பங்கள் யாராலும் சூட்டப்பட்டதில்லை என்பதையும் கவனிக்கலாம் ; மாறாக, தங்களுடைய எழுத்துக்களின், வெளிப்பாட்டின் வழியாக, எழுத்தாளர்கள் தங்களுக்கே சூட்டிக்கொண்ட பிம்பங்கள் இவை. விதிவிலக்குகள் உள்ளனர் என்றாலும் ஒரு மெஷீன் லர்ணிங் புரோகிராமிடம் நூறுவருட தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் நிரையை அளித்தால் இந்த பகுப்பைத் தானாக நிகழ்த்திவிடும் என்று தோன்றுகிறது.

70-களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதை தங்கள் எழுத்தின், அடையாளத்தின் முக்கிய அம்சமாக வைத்திருந்தார்கள். 90-களுக்கு பின் பெண் எழுத்தாளர்கள் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்புவதை ஒரு அடையாளமாகக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுக்குமான வரலாற்றுத் தேவை இருந்தது என்பது நிதர்சனம். இவ்வகை எழுத்தின் வரலாற்று இடத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சுயக்கண்டடைதல் என்று வரும் போது ஏதோ குறைகிறது.  சுயம் என்பது இரண்டின் இசைவு, இரண்டையும் கடக்கும் எழுச்சி. அதற்கான சாத்தியம் எழுத்தில் உருவாக வேண்டும்.

ஏனென்றால் எழுத்து முழுமை பெற, ‘நான்’ என்ற பதத்துக்கு எல்லா சாத்தியங்களும் ஆராயப்பட வேண்டும். தனக்கும் வெளிக்குமான உறவைப் பற்றிய எல்லா சாத்தியங்களும் ஆராயப்படவேண்டும். குடும்பமும் உடலும் உறவுகளும் இவற்றில் சிறு பகுதி. இவற்றில் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதென்பது ஒரு சிறு துளை வழியாக உலகத்தைப் பார்ப்பது போன்றானது.

தங்கள் வட்டத்துப் பிம்பங்களுக்கு வெளியே பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை; இந்த அம்சமே பிம்பத்தை தளையென்றாக்குகிறது. முதல்வகை எழுத்தாளருக்கு சமூகம் தளையென்றால் இரண்டாம் வகை எழுத்தாளருக்கு கருத்தியல் தளை. இந்த பிம்பங்களை மீறிய ஆக்கங்கள் பெரும்பாலும் வந்ததில்லை என்பதே இவை தளைகள் என்பதற்கான சான்று.

ஆக, ‘The Face Behind The Mask’ நூலில் அம்பை குறிப்பிடும் கிணற்றுத் தவளைத்தனம் இன்றும் மறைந்துவிடவில்லை என்று தான் எண்ணத்தோன்றுகிறது. வேறு கிணறு, வேறு தவளைகள், அவ்வளவுதான். ஆனால், வானத்துக்கான ஏக்கம், எல்லா கட்டத்திலும் எல்லா எழுத்தாளர்களிடம் இருந்த ஏக்கம், அப்படியே தான் உள்ளது என்பதை இங்கு வலியுடன் நினைத்துக்கொள்கிறேன். கைகலப்பில் வெற்றி, போரில் தோல்வி என்ற நிலை உருவாகிவிடக்கூடாதே என்று அச்சப்படுகிறேன்.

*

உலகமும், தன் உள்ளமும், தன் மீது சூட்டியுள்ள பிம்பங்களை சட்டைபோல் விலக்கி தன்னுடைய சுய உண்மை என்ன என்று அச்சமறுத்து கண்டடையும் பயிற்சியே எழுத்து. அது நேர்மையுடன் நிகழும்போது இலக்கியமாகிறது. இன்று எழுத வரும் பெண் எழுத்தாளர் தன் மீது இரண்டாயிரமாண்டுகால ஆதிக்க வரலாறு மட்டுமல்லாது, கடந்த ஐம்பது வருடங்களாக உருவாகி வந்துள்ள பின்னமைப்பியலும் பெண்ணிய கருத்தியலும் உருவாக்கிய பிம்பங்களையும் உளவியல் அசைவுகளையும் உள்வாங்கியபடியே கடந்த படியே தான் தன் எழுத்தை தேடலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. சமூகத் தளத்தில் பெண்ணிய கருத்தாடலின் மதிப்பு மிகமுக்கியமானது, அதை குறைத்துப் பேசவரவில்லை. ஆனால் எழுத்தில் உண்மை என்பது எல்லா பிம்பங்களுக்கும் வெளியே தான் உள்ளது, கருத்தியல் பிம்பங்களுக்கும் வெளியே தான்.

அம்மணியம்மாளின் கதையின் வரும் மரத்தின் ‘சங்கல்பம்’ பல்வேறு அழுத்தங்களால் முழுமையாக சம்பவிக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதன் பெறுமதி இன்றும் செல்லுபடியாகிறது. அந்தக்கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது சம்பவித்தாகவேண்டும்.