பகுதி – 1
தூரங்கள்
1
தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் நோக்கம் ஒன்று தான் — சதிர் என்றும் தாசியாட்டம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட நடன வடிவை ஒரு கலையென மக்கள் முன் அறிமுகப்படுத்தி அரங்கேற்றுவது.

You must be logged in to post a comment.