போகட்டும்

வாழ்க்கையின் ரகசியங்களில் ஒன்றை சொல்கிறோம் என்ற எந்தத் தன்னுணர்வும் இல்லாமல் அதைச் சொன்னார் டீச்சர். “போகட்டுமே, இப்போது என்ன?” எந்த அழுத்தமும் இல்லாமல் போகும் போக்கில் தான் அதைச் சொன்னார். எதிரே அமர்ந்த என்னிடம் அக்கருத்தை புகுட்டவேண்டுமென்றோ வலியுறுத்த வேண்டுமென்ற மெனக்கெடல் கூடத் தெரியவில்லை. ஆனால் அதைச் சொல்லிவிட்டு அவர் குழந்தைபோல் சிரித்த சிரிப்பு தான் அது வாழ்க்கையின் அரிய ரகசியங்களில் ஒன்று என்று எனக்கு உணர்த்தியது. ஒருவேளை அது இசைக்கலைஞர்களுக்கே உரிய கள்ளமின்மையாக இருக்கலாம் என்று … Read more

ஒரு தலைமுறையின் விதி

[நன்றி: நீலி இணைய இதழ்]

பகுதி – 1

தூரங்கள்

1

தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் நோக்கம் ஒன்று தான் — சதிர் என்றும் தாசியாட்டம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட நடன வடிவை ஒரு கலையென மக்கள் முன் அறிமுகப்படுத்தி அரங்கேற்றுவது. 

ஈ. கிருஷ்ண ஐயர்

Read more

ஆருயிர்கெல்லாம்

2015-ஆம் ஆண்டு மார்கழி மாதம் திரு. சஞ்சய் சுப்ரமணியன் அவர்களுக்கு சென்னை சங்கீத வித்வத் சபையின் உயரிய விருதான சங்கீத கலாநிதி வழங்கப்பட்டது. அதை அடுத்து கர்நாடக சங்கீதம் பற்றி அளக்கும் இணையப்பகுதிகளில் சஞ்சய்-சஞ்சய் என்று ஒரு நாமசங்கீர்தனமே நடந்தது. ‘இந்த சீசன் வேர யாருமே பாடல போலருக்கு’ என்று நினைக்கும் அளவுக்கு இணையப்புளகாங்கிதம். நக்கலடித்துக்  கொண்டிருந்தவர்களும் ஒரு கச்சேரிக்கு போய் வந்து சப்லாங்கட்டையை தூக்கிவிட்டனர். ‘பைரவிய கிழிகிழின்னு கிழுச்சுட்டாறு’ என்றெல்லாம் அலசல்கள். (மறுபடியும் ஓட்டவைத்தார்களா? தெரியலை). … Read more