துழாவுதல்.

தூங்குமூஞ்சி மரத்தின் குருட்டு இலைகள் யாரை தேடுகின்றன?
தூங்குமூஞ்சி மரத்தின் பிரியமான விரல்கள் யாரை வருடக்கோருகின்றன?
தூங்குமூஞ்சி மரத்தின் தவிக்கும் கைகள் யாரை தழுவப்பார்க்கின்றன?

அதன் அமைதியற்ற துடுப்புகள்
எந்தக்கடலை கடக்க விழைகின்றன?

விசும்பு நிறைந்த வெளியெல்லாம்
அதன் விரல் நுனிகளில்!
என்று
அதற்கு தெரியாதோ?

இரவு வெளியில் எல்லாம் புரிந்து
அமைதி கண்டு அடங்கி உறங்கும் மரம்,
பகல் வந்ததும் எல்லாம் மறந்து
மறுபடியும் துழாவத் தொடங்குகிறது.

(24-6-2016)

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading