சம்ஸ்காரம் [சிறுகதை]

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னன் வேதமங்கலமாக அதை ஸ்தாபித்தார் என்று கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இன்று அரசின் பதிவேடுகளில் வராகமங்கலம் என்ற பெயரே கிடையாது. நடுக்காலத்தில் எப்போதோ அந்த ஊருக்கு பாப்பனேரி என்று பெயர் மாற்றப்பட்டது. அக்ரகாரத்து மனிதர்கள் மட்டும் தங்கள் ஊரை விடாப்பிடியாக வராகமங்கலம் என்றே சொன்னார்கள். இன்று ஏரி வற்றிவிட்டது. ஊரின் கடைசி வாசியும் 1991-ல் இறந்துபோனார். இப்போது இந்தியப் பெருநிலத்தில் திக்குக்கொருவராக வாழும் சில முதியவர்களின் பெயரின் முதல் எழுத்தில் மட்டுமே அது ஊராக எஞ்சியிருக்கிறது. காற்றில் எங்கோ, கண்ணுக்குத்தெரியாத வலைப்பின்னலாக. ஒவ்வொரு பெயரும் பூமியிலிருந்து மறையும்போது அதுவும் மறைந்துபோகும்.

[மேலும் வாசிக்க]

நன்றி – கனலி இணைய இதழ்

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading