விண்ணினும் மண்ணினும் (தொடர்)
நீலி பத்திரிக்கையில் காலத்தில் உருவாகி வந்துள்ள பெண் எழுத்து வகைகளை பற்றிய என் கட்டுரைத்தொடர்.
நீலி பத்திரிக்கையில் காலத்தில் உருவாகி வந்துள்ள பெண் எழுத்து வகைகளை பற்றிய என் கட்டுரைத்தொடர்.
A comparison of the translation strategies of ‘The Kural’ by Thomas Hitoshi Pruiksma and ‘The Book of Desire’ by Meena Kandasamy. https://scroll.in/article/1044151/kural-versus-kural-the-aesthetics-and-politics-of-two-translations-of-tiruvalluvars-classic
பெருந்தேவி மொழியாக்கத்தில் வந்துள்ள அக்கமகாதேவியின் வசனங்களின் தமிழ் மொழியாக்க நூல் பற்றி என் அறிமுகக் கட்டுரை.
I watched Mani Ratnam’s Ponniyin Selvan – 1 twice with my elderly family members who are fans of the book. They loved it. I did too. We all found the film dreamy, mesmerising and magical. The magic was not just about seeing PS alive on the screen, I realized later. It is how MR has … Read more
அஜிதனின் மைத்ரி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இயற்கையின் தெய்வீகம் நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை … Read more
(வல்லினம் இதழில் வெளியான சிறுகதை) மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து அல்லோரியின் மாணவர்கள் சிலர் கூடிக்கூடி அழுதார்கள். மற்றவர்கள் சேர்ந்து தங்கள் பிரியத்துக்குறிய ஆசிரியருக்கு விடுதலையும் … Read more
அசோகமித்திரன் ஜெயமோகனைப்பற்றி 2006-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு மதிப்புரையில் [சுட்டி] ஜெயமோகனின் கதைகளில் அடிக்கடி தோன்றும் ‘அருவருப்பு’ அல்லது ‘பீபத்சம்’ என்ற அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அந்த அம்சத்தின் சரடு நம் மரபில் என்றும் இருந்துள்ளது என்றும் கதா சரித சாகரம் போன்ற நூல்களில் வெளிப்படுவதாகவும் ஆனால் அதற்கு இங்கு தொடர்ச்சி கிடையாது என்றும் கூறுகிறார். இந்தக்கூறுகளின் தொடர்ச்சி ஜெயமோகனில் வெளிப்படுவதாக சொல்கிறார். ஜெயமோகனின் புனைவுகளை வாசித்தவர்களுக்கு தொடர்ந்து அவருடைய கதைகளிலும் நாவல்களிலும் இடம்பெறும் பீபத்சச் சுவை கூடிய … Read more
எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களை வல்லினம் இலக்கிய இதழுக்காக நான் எடுத்த நேர்காணல் [நன்றி : வல்லினம்] * கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும் மிகமிக நெருக்கமானார்கள். எங்கள் உரையாடலின் நீட்சியாக ஒரு நேர்காணல் எடுக்கலாமா என்று கேட்டேன். வாட்சாப்பின் ‘வாய்ஸ் நோட்‘ செயலி வழியாக, பத்து நாள் காலத்தில், நாகர்கோயிலில் அவர்களும் பாசலில் நானுமாக, கிடைத்த நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்குமாகக் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டோம். அவ்வாறு நிகழ்ந்தது இந்த நேர்காணல். அங்கே இப்போது பெய்யும் துலாவர்ஷ … Read more
A translation of Tamil writer A.Muttulingam’s short story ‘Goat Milk Puttu’ into English, published in Narrative Magazine. ALL THIS HAPPENED in Ceylon, long before its name was changed to Sri Lanka. In those days they just called it the Post and Telegraph Service. They had not yet invented grand terms like Postal Department, Division, and so on. Every … Read more
[நன்றி : jeyamohan.in] மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது ஒரு மகாகலைஞனின் படைப்புக்கு நிகரான கலைப்படைப்பாக நிற்கும் என்பதை டேவிட் அட்டன்பரோ கதைசொல்லும் இயற்கை ஆவணப்படங்களே எனக்குக் கற்பித்தன. அதன் உச்சமாக சமீபத்தில் ‘Dynasties’ (வம்சங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் இடம்பெற்றது. இந்தத்தொடர் இந்தியாவில் SonyLIV தளத்தில் காணக்கிடைக்கிறது. இத்தொடரை ‘எபிக்’ … Read more
You must be logged in to post a comment.