சிறுகதை – நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை. முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன். அணில்கள் எங்கள் வீட்டில் வாடகை கட்டாமல், ஏழெட்டு … Read more

சிறுகதை: யாமத்தும் யானே உளேன்

(அரூ இதழின் 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) இருளாழத்துக்கு மறுபக்கமாக எங்கேயோ இங்குள்ள கதைகளெல்லாம் காத்துக்கொண்டிருக்கின்றன. அவை இரவெல்லாம் ஒன்றுடன் ஒன்று கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாக உறங்குகின்றன. அவை ஒன்றை ஒன்று தழுவிக்கொள்கின்றன. விரல்பின்னி மூச்சிசைந்து நெஞ்சதிர்வுகள் இணைய நிசப்தத்தில் கனவு காண்கின்றன. இங்குள்ளவளின் உள்ளம் சுற்றிச்சுழன்று வந்து அவர்களை அடைவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன அவை. அவள் இருளின் கவசங்களை அவனறியாமலேயே மெல்ல, இரவெல்லாம் பொறுமையாக, அவிழ்த்துக் களையும் கலை அறிந்தவள். மெல்லப் படிவைத்து … Read more

Short story – The blue eye

The greatest storyteller of all, the old crab-crone, sits brown and withered on the searock, like one of the salt-streaked ferns clinging to its sides; the spray of the seafoam tosses against her hunched back and turtly neck, and streams down her shriveled breasts like silvered locks, gleaming with the wisdom of all the added … Read more

மொழியாக்கம்: எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

(மூலம் – வங்காளம். அருணாவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில்) …இங்கு எப்படி வருவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. எரிகல் ஏரி இந்த மாவட்டத்தில் தான் எங்கோ உள்ளது. ஆனால் சரியாக எந்த இடத்தில் என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக கிராமத்து மக்கள் அவர்களுடைய சுற்றுவட்டாரப்பகுதிளை பற்றியோ, மிஞ்சி மிஞ்சி போனால் அண்டை கிராமங்களை பற்றியோ தெரிந்து வைத்திருப்பார்கள், அவ்வளவுதான். மும்பையிலிருந்து ஜால்னாவுக்கு ஒரு ரயில்வண்டி உள்ளது, பாஸஞ்சர் வண்டி. ஜால்னாவில் இறங்கியிருந்தால் அங்கிருந்து … Read more

Translation: Devaki Chithi’s Diary

A translation of the Tamil short story ‘தேவகி சித்தியின் டயரி’ (1999) by B.Jeyamohan. Amma, my mother, sent me to find out whether Devaki Chithi was coming downstairs to get her coffee or not. I pushed against the door of the room where Chithappa and Chithi, my uncle and aunt, usually sleep; it was locked. So, I marched … Read more

Interview: with translator N. Kalyan Raman

N Kalyan Raman, a bilingual translator, is best known for his English translations of the works of eminent Tamil modernist writer Ashokamitran. Suchitra Ramachandran, a young translator who won the Asymptote Close Approximations translation fiction prize in 2017 for her translation of the Tamil short story “Periyamma’s Words” by B. Jeyamohan, works in the same languages.  The two translators met in Chennai, … Read more

சிறுகதை – தேள்

1 ஒரு ஊரில் வாழும் அனைவரும், அவரவர்களின் அறைகளில் வீடுகளில் அலுவலகங்களில், ஒரு நாள், எங்குப் பார்த்தாலும் தேள்களாக இருப்பதைக் காணத்தொடங்குகிறார்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்? பழுப்பும் சிவப்பும் கருப்புமாக நிறம் நிறமாக எங்கும் தேள்கள். குட்டிகளைச் சுமந்தபடி சில. ஒன்று மற்றொன்றை உண்டபடி சில. கொடுக்கைத் தூக்கியபடி ஆறு கால்களில் குருக் குருக்கென்று வினோத அசைவுகளுடன் மெல்ல அடியெடுத்து நடந்தபடி சில. தாட்டானாகத் தனித்திருந்து விஷம்வளர்க்கும் கருந்தேள்கள் சில. சர்க்கரை டப்பாவைத் திறந்தால் தேள். கதவிடுக்கில் தேள். அலமாரிகளில் புத்தகங்களின் முதுகுத்தண்டுகளில் பலவிதத்தேள்கள் … Read more

மொழியாக்கம்: வெற்று பக்கம்

(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page) புராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: “கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா? என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி … Read more

சிறுகதை – சிறகதிர்வு

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை. … Read more