வைரமுத்துவும் தமிழ் இந்துவும்

ஆசிரியர் குறிப்பு – அக்டோபர் 2018-ல் மீ டூ என்ற இயக்கத்தின் வாயிலாக, கலைத்துறை உள்ளிட்ட பல பொதுத்துறைகளில் இயங்கும் பெண் உறுப்பினர்கள், தங்கள் பணி நிமித்தமாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்துகொண்டார்கள். இவ்வகை தொந்தரவுகளும் சிக்கல்களும் பெரும்பாலும் தனிமையில், சாட்சிகளில்லாமல் நடைபெறுபவை. நாசூக்காக நிகழ்த்தப்படுபவை. சட்டத்தின் முன்னால் நிறூபணம் செய்யக் கடினமானவை. ஆனால் பெண் ஊழியர்களின் வேலைச் சுதந்திரத்தை ஆழமாக குறிவைத்து முறியடிக்கும் வல்லமை கொண்டவை. இந்த அலையின் பகுதியாக பல பெயர்கள் வெளிவந்தன. … Read more

வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3.

வைரமுத்து மீதான குற்றச்சாட்டு என்ன? — தன்னுடைய துறையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை, வேலை நேரத்தில், அவருடைய விருப்பமின்றி, பாலியல் தொந்தரவு செய்து வற்புறுத்தி, அது பலிக்காதபோது மிரட்டியும் இருக்கிறார். இதுதான் அவர் பெயரில் உள்ள குற்றச்சாட்டு. இதை ஒன்றல்ல, இரண்டல்ல, பதிமூன்று நபர்கள் வாக்குமூலமாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை. வெவ்வேறு பின்புலங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் முன் தொடர்பு இல்லாதவர்கள். சிலர் பாடகிகள். சிலர் அவருக்கு சொந்தமான பெண்கள் விடுதியில் … Read more

வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2.

கலைஞர்களும் ஒழுக்கமும் — இந்த விவகாரத்தை ஒட்டி ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர். கவிஞர். அவர் பங்களிப்பை கொண்டாடும் முகமாக ஒரு சிறப்புப்பக்கம் வெளியானால் என்ன? அவர் தனி வாழ்க்கை, ஒழுக்க நியமக்குறைகள், எப்படிப் பட்டதாகவென்றாலும் இருக்கட்டுமே? கலைஞர்கள் தாம் அராஜக வாழ்க்கைமுறை கொண்டவர்களாயிற்றே? அது அவருடைய கலைசார் பங்களிப்பை குறைப்பதில்லையே? பாப்லோ நெரூதா உள்ளிட்ட எத்தனையோ பெருங்கலைஞர்கள் செய்யாததையா வைரமுத்து செய்துவிட்டார்? அதற்காக அவர் கலைப்பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா? … Read more

வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1.

இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா? வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு சார்ந்த குற்றச்சாட்டுகள் சக கலைஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வேளையில், அவரைப் பற்றித் தமிழ் இந்துவில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு சிறப்புப் பக்கங்கள் வெளியிடப்பட்டன. அது அவரை கௌரவிக்கும், புகழும் விதமாக அமைந்திருந்தன. இதை பற்றி கவிஞர் பெருந்தேவியின் பதிவு வாயிலாக என் பார்வைக்கு வந்தது. எதிர்ப்பு எழுந்ததன் பெயரில் தற்போது அவை பின்வாங்கப்பட்டுள்ளன. தமிழ் இந்து ஒரு வெகுஜன பத்திரிக்கை. பல லட்சப்பிரதிகள் … Read more

How I Became a Writer – Gabriel Garcia Marquez

(Originally published in New Yorker magazine, Oct 6, 2003) “In any case, that story already belongs to the past,” he concluded. “What matters now is the next one.”   I never imagined that, nine months after I had completed secondary school, my first story would be published in Fin de Semana, the weekend literary supplement of El Espectador, … Read more

சிறுகதை – ஒளி

அழகுக்கடைக்கு முன்னால் ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நேரமா நிற்பது? ஃபிலோமினா பொறுமையிழந்தாள். கூட்டத்திலிருந்து நகர்ந்து பத்ரகாளிக்கு அடியில் போய் கைகட்டிக்கொண்டு நின்றாள். அவள் தலைக்கு மேல் தூணின் பொந்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கின் தீ காற்றில் படபடத்தது. எதிரே ஊர்த்வதாண்டவர் ஒரு காலை தூக்கி மறந்துவிட்டவர்போல் கனவில் ஆழ்ந்திருந்தார். ஆரன் உடைந்த தமிழில் உற்சாகமாக பேரம்பேசிக்கொண்டிருந்தான். ஃபிலோமினா அங்கு இல்லை என்று உணர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அவளை கண்களால் அடைந்து, “உனக்கு எதுவுமே வேண்டாமா? நிச்சயமா?” … Read more

சிறுகதை – ஒரு மழைநாள்

(நன்றி – சொல்வனம்) நான் சிறுவனாக இருந்தபோது மதுரையில் நிறைய மழைபெய்ததாக நினைவு. ஆம், சித்திரை, ஆடி, ஐப்பசி, மார்கழி என என் நினைவுகளின் மதுரை மழை அலுக்காத ஊராகவே இருக்கிறது. என் நினைவுகளில் கண்மாய்க்கள் நிரம்பி வழிகின்றன; வைகையில் வெள்ளம் பெருகிப் புரண்டு செல்கிறது. ஊரே புதிதாய் பிறக்கிறது. அல்லது மழை நாட்களும் வெள்ளப்பெருக்கும் மட்டுமேயான நினைவுகளாக என் நினைவுகள் இருக்கலாம். ஏனென்றால் சிறுவயதில் மழைநாட்கள் மாயம் நிறைந்தவை. மண்ணை உசுப்பிவிட்டு புதையுண்ட வாசங்களையும் பெயரறியா … Read more

சிறுகதை – ஹைட்ரா

(நன்றி – பதாகை இதழ், அக்தோபர் 2019 ) பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…” கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள். அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது,  லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது … Read more

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்

(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் பேசியதன் கட்டுரை வடிவம். நன்றி: jeyamohan.in) அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை,  அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல … Read more

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

(சொல்வனம் – 200: எழுத்தாளர் அம்பை சிறப்பிதழில் பிரசுரமான கட்டுரை. நன்றி: சொல்வனம்) கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை … Read more