அந்தக் கலயம், அந்தப் பறவை, அந்த மலர்

தமிழ் நவீனக் கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் அவற்றைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. ஒரு காரணம் நவீன கவிதையைப் பற்றி எனக்கு அசலாக எதுவும் சொல்ல இருக்கிறதா என்ற ஐயம். தமிழ் நவீனக் கவிதையின் மரபை வாசிப்பு வழியாக ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் ஒரு புதிய கவிதையை வாசிக்கும்போது அதை மரபில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க முடிவதில்லை என்னால். அல்லது அதை இரண்டாம் கட்டமாக, வலிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு கவிதை வாசிப்பு என்பது எப்போதும் மிகவும் personal-ஆன … Read more

பெண்ணெழுத்தாளர்களும் இயல்புத்தன்மையும்

நீலியில் வெளியான பத்மா விஸ்வநாதனுடனான நேர்காணலைப் பற்றிக் கடிதம் எழுதி அனுப்பிய பிறகு அதில் பத்மாவின் வெளிப்பாட்டில் இருந்த இயல்புதன்மை பற்றிச் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நினைப்போடு வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கை மீண்டும் சென்று பார்த்தேன். அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் … Read more

காதலும் காலமும் — மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை ஆசிரியருக்கு, எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து … Read more